Wednesday 27 April 2016

சன்னியாச யோகம்

                                  சன்னியாச யோகம்

ஸ்ரீபத்ரகாளியம்மன் அருளுடன்

                   ஒருவர் பிறக்கும் போது சாதரன நிலையில் பிறந்து பிறகு சந்நியாச நிலைக்கு உயர்ந்தவர்கள் பலருண்டு.
               கொளதம புத்தர் அரச குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அவன் பிறந்த உடனே அவர் பிற்காலத்தில் சந்நியாச வாழ்க்கையை மேற்கொள்வார் என அவர்களது அரச சோதிடர் புத்தருடைய தந்தையிடம் கூறியவுடன் அவர் தன் மகன் சித்தார்த்தான் சந்நியாச வாழ்வு மேற்கொள்ளக்கூடாது என அவரை அறையில் அடைத்தே வைத்திருந்தார்.

             அங்கு அவருக்கு சகல வசதிகளையும் கிடைக்கும்படி செய்தார்.   வாடாத மங்கைகளை வைத்து பணிவிடை செய்ய வைத்தார்.அங்கு உள்ள பூச்செடியில் உள்ள பூ கூட உதிர்ந்து விழுவது  மகனுக்கு தெரியக்கூடாது என பூ வாடி விடுவதற்கு முன்னே பறிக்கும்படியான ஆட்களை நிரப்பி வைத்திருந்தார்.ஏனெனில் பூ உதிர்ந்து விழுவதை பார்த்துக்கூட ஏன் ?எதற்கு ? வினா எழுப்பி ஞானம் பெறக்கூடும் என எண்ணினார்.


            திருமணமும் நடத்திவிட்டார்.ராகுல் என்ற மகனும் பிறந்துவிட்டான்.இனி தன் மகன் மாற மாட்டான் என வீதியை சுற்றி பார்க்க அனுமதி அளித்தான்.அங்கு பிணியுற்றோர்,இறந்தோர் போன்றவர்களை பார்த்த பிறகு மனித துன்பத்திற்கு காரணம் என்ன ? என்னும் வினா அவர் உள்ளத்தில் எழுந்து அதன் விளைவாக ஒருநாள் மனைவி மக்களையே விட்டு பிரிந்தார்.கயா எனும் மரத்தடியில் இருந்து தவமிருந்து "ஆசையே துன்பத்திற்கு காரணம்,ஆசையை நீக்கினால் துன்பமின்றி வாழலாம் " என விடை கண்டு ஞானம்பெற்றார்.

            நான் இக்கதையை(சோதிட சம்பந்தப்பட்ட கருத்துக்களை அதிகம் பதிவிட விரும்பியதால் புத்தர் கதையை சுருக்கிவிட்டேன்)
சோதிடம் அறியாத காலத்தில்
இளம்வயதில் அவனது சாதகத்தை பார்த்த சோதிடர் என்ன கூறியிருப்பார் ? என வினா எழும்பியதுண்டு.

                       அதற்கான விடையை சோதிடராகிய பிறகுதான் அதற்கான விடையை பெற்றேன்.ஒருவரது சாதகத்தில் கர்மாதிபதி என அழைக்கப்படும் பத்தாம் அதிபதியுடன் இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் கூடி 2,4,7,8,10 மற்றும் 12 ஆம் இடங்களில் நிற்கும் சாதக அமைப்பை பெற்றவர் சந்நியாசி ஆவான் என்பது சோதிட விதியாகும்.

      மேலும் புலிப்பாணி சித்தரும் தனது புலிப்பாணி சோதிடத்தில்

                "கேளப்பா ஈரைந்தில் முக்கோள் நிற்கில் கெதியுள்ள சந்நியாச யோகம் யோகம்" என்கிறார்.

                                                    


கொளதம புத்தரின் சாதக விபரம்


               கடக லக்கனம்,துலாம் ராசி


       6-ல் கேது

     10-ல் சூரியன்,செவ்வாய்,குரு,சுக்கிரன் மற்றும் சனி (ஐந்து கிரகங்கள்.
       11-ல்  புதன்
       12-ல் ராகு

             எனவே கொளதம புத்தருடைய சாதகத்தில் பத்தாம் அதிபதி செவ்வாய் ஆட்சி பெற்று ருசகயோகமும் பெற்று இரண்டிற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்ததால்தான் இளம்வயதிலே சோதிடர் இவரை சந்நியாசி ஆவார் என கூறியதும் அதேபோல பிற்காலத்தில் மாறியதும்தான் சோதிடத்திற்கு வரலாற்று ரீதியான சான்றுகளாகும்.

               இவை மட்டுமல்லாயமல்  சூரியன் உச்சம் பெற்று குரு உடன் சேர்ந்து இருப்பது ஆன்மீகத்தில் சிறந்த தலைவராகலாம்.எனவேதான் புத்தமதத்தை நிறுவசெய்து அதன் தலைவராக மாற்றியது.மேஷத்தில் கர்மக்காரகன் என சனி பகவான் நீசம் பெற்று சூரியன் உச்சம் பெற்று நீசபங்க யோகத்தையும் உண்டாக்கியது.

             ஒரு மனிதனை ஐந்தாமிடத்தில் கேது பகவான் அமர்வதும் அதுவே கடக வீடாக இருந்து கடக கேதுவும் ,மகர ராகுவும் சந்நியாச வாழ்வு மேற்கொள்ள வைக்கும்.

               எனவேதான் ஜோதி ராமலிங்க சுவாமி (வள்ளலார்) அவர்களது சாதகத்தில் கடக கேதுவும்,மகர ராகுவும் இடம் பெற்ற காரணத்தால் சுவாமி அவர்களுக்கு இயற்கையிலே தெய்வ தன்மை ஏற்பட்டது.
இவருக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ,கேது சேர்க்கை சந்நியாச வாழ்க்கையை தந்தது.இவர் இளமைக்காலத்தில் மழைக்கூட பளளிக்கூடம் ஒதுங்கியதில்லை .ஆனால் இவர் எழுதிய திருவருட்பா முதலான பல  நூல்களுக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களால் கூட தொகுக்க முடியாத அளவிற்கு புலமை வாய்ந்ததாக திகழ்ந்தது.

வள்ளலார் சாதக விபரம்

        மீனம் லக்கனம்,துலாம் ராசி,சித்திரை நட்சத்திரம்-4-ம் பாதம்


        3-ல் சனி

         4-ல் குரு
         5-ல் செவ்வாய்,கேது
         7-ல் சூரியன்,சுக்கிரன்
          8-ல் புதன்,சந்திரன்
        11-ல் ராகு.

            ஒருவரது சாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று ஞானகாரகன் கேது பகவானையும் மற்றும் கர்மக்காரகன் சனி பகவானை சமசப்தமாக பார்காமல் பார்த்து அவரது குடும்ப மற்றும் களஸ்திரஸ்தானம் பலவீனப்படும்போது சம்சார வாழ்வை விட்டு விலகி சந்நியாச வாழ்வை மேற்கொள்வான்.

              "கட்டிய மனையாள் ஏறுக்குமாறானால் சற்றேனும் கூசாமல் சந்நியாசம் கொள்"எனும் கூற்றுப்படி லொளகீக வாழ்வை வெறுத்து சந்தர்ப்ப வசத்தால் சந்நியாசி ஆவாருண்டு.


சாதக அலங்கார பாடலில் கூறியுள்ளபடி
"வேண்டிடும் செவ்வாய் ரவி மதி மூவர் கூடி விரும்பு பத்தாமிடத்திலிருக்க மின்னார் பொன்தனக்கும் ஈண்டிய தேர் விரிவில்லாச் சன்னியாசி ஆவான்"

    சூரியன்,சந்திரன்,செவ்வாய் கூடி பத்தாமிடத்தில் இருந்தாலும் இவர்களை குரு பார்த்தாலும் இவன் எப்பொழுதும் சன்னியாசியாக இருப்பான்.

                                                                             


அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி ஜோதிட ஆய்வு மையம்,
கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.

எனது வாட்ஸ்அப் மற்றும் செல் எண் இரண்டும் ஒரே எண்
அவை 97 151 89 647
மற்றொரு செல்
740 257 08 99

(தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதிட பலனை நன்கு ஆராய்ந்து ஒவ்வொறு பாவத்திற்கு உண்டான பலனை விரிவாக போன் வழியாக பெற தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு)

Thursday 21 April 2016

செவ்வாய் தோஷமும் ,திருமண வாழ்வும்


                                   


செவ்வாய் தோஷமும்,திருமணவாழ்வும்




ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

                இன்றைய காலகட்டத்தில் சிலரது திருமண வாழ்வு  என்பது செவ்வாய் தோஷத்தால் காலதாமதமாகி கொண்டே செல்வதும் அதனால் அப்பிள்ளையை பெற்ற பெற்றோர்கள் வேதனையடைவதையும் சோதிட துறைக்கு வந்த பிறகு நான் கண்கூடாக கண்டதன் விளைவாக அவர்களுக்காக ஒரு சோதிட பதிவு இட வேண்டும் என எண்ணியதன் விளைவாக இப்பதிவை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.

             இந்த செவ்வாய் தோஷம் என்பது வெறும் தோஷமே ஆகும்.இதற்காக பயப்பட தேவையில்லை.இது ஆயுளை கெடுப்பது கிடையாது.

              சில சோதிடர்கள் செவ்வாய் களத்திரத்தின் ஆயுளை கெடுக்கும் என பயமுறுத்தியதன் விளைவாக பல பெண்களுக்கும்/ஆண்களுக்கும் திருமணம் என்பது நடைபெறுவது கால தாமதமாகி பலர் முதிர்கன்னிகளாகவே இருக்கிறார்கள்.

                செவ்வாய் தோஷம் என்பது ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ அல்லது சுக்கிரனுக்கோ 2,4,7,8,மற்றும் 12 ம் இடங்களில் செவ்வாய் இருப்பின் செவ்வாய் தோஷமே ஆகும்.

               இதில் என்னைப்பொறுத்தவரை இரண்டாமிடம் ,ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் இந்த ஸ்தானங்களில் செவ்வாய் அமர்வது நல்லதல்ல ஏனெனில் இவை யாவும் திருமணவாழ்வு சிறக்க உகந்த இடமாதலால் இதுபோன்ற இடங்களில் பாவியாய செவ்வாய் பகவான் அமர்தல் கடுமையான செவ்வாய் தோஷத்தை உண்டுபண்ணும்  என்பது என் அனுபவ உண்மையாகும்.

                இதுபோன்ற செவ்வாய் தோஷம் உள்ள ஒருவருக்கு செவ்வாய் தோஷம் உள்ள ஒருவரைதான் ஜோடியாக இணைக்கவேண்டும் .இதற்கான காரணத்தை அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
                                               


                செவ்வாய் தோஷத்தை பொறுத்தவரை மூன்று வகையாக அவை தரும் பாதிப்பின் அடிப்படையில்  பிரிக்கலாம்.அவையாவன:-

1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்.

2)தாம்பத்ய உறவை பாதிக்கும் செவ்வாய் தோஷம்

3)உயிரைக்கெடுக்கும் செவ்வாய் தோஷம்
    என பிரித்து பார்க்கலாம்
                                         

1)உடல் நலத்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்:

-
                     செவ்வாய் என்பது நமது உடலில் உள்ள இரத்தத்தை குறிப்பதாகும்.நமது இரத்தத்தில் ஆண்டிஜென் ,ஆண்டிபாடி எனும் இரு பகுதிகளின் கலவையாகும்.இங்கு ஆண்டிஜென் நுண்கிருமி ஆகும்.இது உடலுக்கு நல்லதல்ல. உலகிலே ஆண்டிஜென் இல்லாத ஒரே பொருள் தாயின் பால் ஆகும்.எனவே தாய் பாலை அருந்திய குழந்தைகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியுடையவர்களாக உள்ளார்கள்.மற்றொன்று ஆண்டிபாடி ஆகும்.ஆண்டிபாடி என்றாலே "எதிர்ப்பு சக்தி" என்று பொருள்.இது இரத்தத்தில் மிகுதியாக இருப்பது நல்லது.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

                    இதை ஏன் இவ்வளவு தூரம் ஒரு அறிவியல் ஆசிரியாக விளக்கினேன் ஏன் எனில் செவ்வாய் தோஷம் உள்ளவர்களது இரத்தத்தில் இந்த ஆண்டிஜென் எனும் நுண்கிருமி அதிகமாக இருக்கும்.இந்த கிருமிகளை எதிர்க்கும் சக்தியான ஆண்டிபாடியும் அவர்களது இரத்தத்தில் அதிகப்படியாக இருப்பதால் அது அவர்களை பாதிக்காது.ஆனால் அதே நேரத்தில் செவ்வாய் தோஷம் இல்லாதவர்களை மணக்கும்போது இந்த நுண்கிருமிகள் செவ்வாய் தோஷமில்லாதவர் உடலில் நுழைந்து நாளுக்குநாள் உடல் மெலிந்து நோயாளியாவர்.

                    ஆண் ஜாதகத்தில் இரண்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் செவ்வாய்பகவான்  இருந்து அவருடன்  ராகு அல்லது கேது பகவான் இணைந்திருந்தால் (இது மனைவி ஸ்தானத்திற்கு ஆறாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆக வரும்) இதனால் அவனுக்கு வரும் மனைவிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமிருந்தால் அவளுக்கு திருமணத்திற்கு பிறகு மாதாவிலக்கு கோளாறுகள்,கர்ப்பபையில் கட்டிகள்,அதிகமான உதிரப்போக்கு,அடிக்கடி கருச்சிதைவு மற்றும் இரத்தசோகை போன்ற நோய் உண்டாகலாம்.இதனால் உடல் நலம் பாதிக்கப்படலாம்.இது செவ்வாய் திசையினிலோ அல்லது செவ்வாயுடன் சேர்ந்த ராகு,கேது திசைகளில் மேற்படியான பலன்கள் நடைபெற வாய்ப்பு உண்டு.

              இதேபோல பெண் ஜாதகத்தில் இரண்டாமிடத்திலோல்லது பணிரெண்டாமிடத்திலோ செவ்வாய் இருந்து அவருடன் ராகு மற்றும் கேதுபகவான் இணைந்திருந்தால் அவளுக்கு வரும் கணவனுக்கு செவ்வாய் தோஷம் இல்லையென்றால் இரத்தத்தில் கிருமிகளின் தாக்குதல்,விரை வீக்கம் ஏற்படுதல் மற்றும் அறுவை சிகிச்சை பாதிப்புகள் செவ்வாய் திசையிலோ அல்லது ராகு/கேது திசைகளில் தரலாம்.
                                                     


2)தாம்பத்ய சுக்த்தை பாதிக்கும் செவ்வாய் தோஷம்;-


                பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமா இருக்கும்.காம உணர்வு மிகுதியாக இருக்கும்.இரத்தத்தின் தன்மை அதிக வீரியத்துடன் இருக்கும்.உயிர் திரவம்(விந்து/அண்ட அணுக்கள்) கெட்டித்து இருக்கும்.தாம்பத்ய உறுப்புகள் வலிமை மிக்கதாக இருக்கும்.தாம்பத்ய உறவில் தீவிரமான ஈடுபாட்டில் இருப்பார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை அதிகமாக விரும்புவுவார்கள்..இவர்கள் இரத்தத்தில் ஆண்டிஜென் மிகுந்திருக்கும்.
செவ்வாய் தோஷம் இல்லாதவர்கள் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.காம உணர்வு சராசரியாக இருக்கும்.இவர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவார்கள்.தங்களின் எதிர்பாலினத்தாரை அனுசரித்து நடந்து கொள்வார்கள்.தாம்பத்ய உறவுக்கு அதிகம் முக்கியத்துவம் தரமாட்டார்கள்.பாலுணர்வு தொடர்பான உரையாடலை விரும்பி பேசமாட்டார்கள்.இவர்களது இரத்தத்தில் ஆண்டிஜென் அதிகம் இருக்காது.

           எனவேதான் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவ்வாய் தோஷம் உள்ள மற்ற நபரை இணைக்கவேண்டும்.இவ்வாறு செவ்வாய் தோஷம் உள்ளவரை இத்தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது அவர்களது காம உணர்வுக்கு இத்தோஷமில்லாதவர்கள் ஈடுகொடுக்க இயலாததால் அவர்கள் வேலி தாண்டிய வெள்ளாடு ஆக மாறும் நிலைக்கு வந்து விடுகிறார்கள்.

                 ஆண்/பெண் ஜாதகத்தில்  செவ்வாய் நான்கு,ஏழு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் இருந்து அவருடன் பாதிக்கப்பட்ட சுக்கிரன் (நீசம்,அஸ்தங்க மற்றும் வக்கிர) இணைந்து சுபர் பார்வை பெறாவிடில்
இவர்களை செவ்வாய் தோஷமில்லாதவரோடு இணைக்கும்போது அவனோ /அவளோ காம மிகுதியால் அதாவது உடல் உறவில் திருப்தியில்லாமல் பல மலரில் தேன் எடுக்கும் வண்டாவாள் அல்லது தனியாக பிரிந்து வாழும் சூழ்நிலையை உருவாக்கும்.இது செவ்வாய் அல்லது சுக்கிரதிசையில் நடக்கலாம்.
                                                                    


3)உயிரை கெடுக்கும் செவ்வாய் தோஷம்:-


         கால புருஷ லக்கனத்திற்கு பாதகாதிபதியான சனி பகவான் தனக்கு சத்ருவான செவ்வாய் பகவனோடு இரண்டு,நான்கு,ஏழு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் அமர்ந்து  அவனுக்கோ/அவளுக்கோ வரும் ஜோடிக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் இருந்து விவாகம் செய்தால் செவ்வாய் திசை சனிபுத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ தன் துணையை இழக்கும் வாய்ப்பு உருவாகும்.

           செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு லக்கனத்திற்கு இரண்டு மற்றும் ஏழாம் அதிபதி வலுக்குறைந்த நிலையில் செவ்வாய் தோஷம் இல்லாதவரோடு இணைக்கும்போது இந்த செவ்வாய்தோஷமே தாரதோஷமாக மாறி தோஷம் இல்லாதவரின் உயிரை பறித்து விடும்.அதேநேரத்தில்( 2,7 ஆம் அதிபதி ) வலுவான நிலையில் தோஷமில்லாதவருக்கு திருமணம் செய்யும்போது உடல் நலக்குறைவும்,தாம்பத்ய குறைபாடும் உருவாகலாம்.



அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd,,
சோதிட ஆராய்சியாளர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
வாழ்வியல் ஆலோசகர்,
ஓம் சக்தி சோதிடநிலையம்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு,இந்தியா.

My Email
masterastroravi@gmail.com

My facebook link
Do you want to know more information search below address
m.facebook.com/ravichandran3538039

எனது வாட்ஸ்அப் மற்றும் செல் எண்ணும் ஒரே எண் ஆகும்.அவை
97 151 89 647

மற்றொரு செல் எண்
740 257  08 99

(தங்களுக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சோதிட ஆலோசனையை போன் வழியாக பெறலாம்.திருமண பொருத்தம்,புத்திரபாக்கியம் தொடர்பாக,வேலைவாய்ப்பு மற்றும் கடன்பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு தீர்வு அளிக்கப்படும்.எனது செல் அல்லது வாட்ஸ் அப் அல்லது மெஸ்ஸேன்சர் மற்றும் இமெயில் மூலமாக தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் இடத்தை தெரிவித்து பலன்பெறலாம்.கட்டாயம் கட்டணம் எனது வங்கி கணக்கில் ஏறிய பிறகே பலனளிக்கப்படும்.)Do you want to consult your horoscope through mophile ? ,conduct me.Charge is applicapable.