Saturday 28 January 2017

காமம் உணர்வினில் கிரகங்களின் பங்கு

காமம் உணர்வினில் கிரகங்களின் பங்கு



செவ்வாய்பட்டி ஸ்ரீபத்ரகாளியம்மன் 
துணை !

                  உண்ணுதல் ,உறங்குதல் போல காமமும் மானிட வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத உணர்வு ஆகும்.உலக உயிர்களின் சுழற்சிக்கு இந்த காம உணர்வு அத்தியாவசமான ஒன்றாகும்.

                காமம்  என்பது ஹார்மோன்களின் ஆட்டம் ஆகும்.ஒரு குழந்தையானது பிறப்பெடுக்கும்போதே இனப்பெருக்க ஹார்மோன்களை தவிர இதர எல்லா ஹார்மோன்களும் உற்பத்தியாகிறது.ஆனால் இந்த இனப்பெருக்க ஹார்மோன்கள் மட்டும் ஒரு குழந்தையானது குமரப்பருவத்தை (adolecence period ) தொட்டவுடனே உற்பத்தியாகிறது.

              ஆடவரின் இனப்பெருக்க ஹார்மோன்கள் ஆண்ட்ரோஜன்(புரஜெஸ்டீரான் ) மற்றும் மகளிரின் இனப்பெருக்க ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஷன்,ரிலாக்ஸின் போன்ற ஹார்மோன்களும் சுரக்க ஆரம்பிக்கிறது
                                                   
                   ஒரு மனிதனின் காமம் உணர்வினில்  வழிநடத்தி செல்லக்கூடிய கிரகங்கள் காமகாரகன் செவ்வாய்பகவான் ,கற்பனைகாரகன் சுக்கிரபகவான் மற்றும் மனோகாரகன் சந்திரபகவான் இந்த மூன்று கிரகங்களுக்கும் அளப்பறிய பங்கு உண்டு.

          இதேபோல சாதகட்டத்தில் உள்ள பணிரெண்டு கட்டங்களில் காமம் வாழ்விற்குரிய பங்கினை அளிக்கக்கூடிய ஸ்தானங்கள் மூன்று,நான்கு ,ஐந்து ,ஏழு ,எட்டு மற்றும் பணிரெண்டாமிடம் ஆகும்.
இந்த ஆறு கட்டங்களும் மனித வாழ்வின் செக்ஸ் நிலையை அறிந்து கொள்ள பேருதவி புரிகிறது.காம வாழ்வில் இக்கட்டங்களின் பங்கு எவ்விதமாக அமைகிறது என்பதை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் என்பது தெளிவாக புரிகிறது.இதோ விரிவாக இப்பொழுது பார்ப்போம்.
                                                                   


மூன்றாமிடம்


          ஒரு சாதகரின் காம வீரியத்தை பற்றி அறிந்து கொள்ளவும் மற்றும் அவரது காமம் வலிமையினை பற்றி புரிந்து கொள்ள இந்த ஸ்தானம் பேருதவி புரிகிறது.

நான்காமிடம்


         காம இன்பத்தை அனுபவிக்க கூடிய சுகத்தினையும் ,அந்தரங்க வாழ்வினையுய் அறிந்துகொள்ள இப்பாவகம் உதவிபுரிகிறது.


ஐந்தாமிடம்


       ஒருவரது சிற்றின்பநிலை,காமம் வயப்படும் நிலை,உடல் கவர்ச்சி ,அங்க அவயங்கள் காம உணர்வினை பிறருக்கு தூண்டும் வகையில் தன்னை அழகுபடுத்திக்கொள்ளுதல் மற்றும் மனைவி மீது மோகம் கொள்ளுதல்.

ஏழாமிடம்


                      கணவன் -மனைவி உறவுநிலையையும்,தொட்டு தழுவிக்கொள்ளுவதால் உண்டாகும் சுகநிலையையும் குறிக்கும்.ஆணோ அல்லது பெண்ணோ தனக்கு இணையானவர்களை உறவாக்கி கொண்டு காமசுகம் பெறல்.

எட்டாமிடம்


          இவை பாலின உறுப்புகளை பற்றியும் மற்றும் பாலினநோய்கள் பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.

பணிரெண்டாமிடம்

                                                                     

            ஒருவரது படுக்கை சுகத்தை பற்றி இப்பாவகத்தின உதவியால் அறிந்துகொள்ள முடிகிறது.

              ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர்களின் உன்னத பண்பாடு ஆகும்.தனது காம உணர்வினை முறையாக வெளிப்படுத்தி கொள்ள திருமணம் என்ற பந்தம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பலரது முன்னிலையில் முழுமையான ஆசிர்வாதத்தோடு தனது காமத்தினை நெறிபடுத்தப்பட்ட முறையில் வெளிப்படுத்தி அதன் மூலம் இன்னொரு பிறப்புக்கு மூலதாரமாக நீர்இருக்கவேண்டும்.

              திருமணமான ஆணும் பெண்ணும் சந்திக்கும் முதலிரவினை சாந்திமுகூர்த்தம் என அழைத்தனர்.ஆம் அலைபாய்ந்த காம எண்ணத்தை முறையாக வெளிப்படுத்தி மனதினை சாந்தி செய்வதால்தான் அவ்வாறு அழைத்தனர்.

              இவ்வாறு முறையான காம உணர்வினை வெளிப்படுத்திக்கொள்ளாமல் தறிகெட்டு திரிவதற்கும் ,பல மலரை நாடி செல்லும் வண்டினைப்போல வேலி தாண்டுவதற்கும் அவரது சாதக கட்டங்களில் கிரக அமைப்புகளே காரணமாக அமைகிறது.
பொதுவாக ஆணோ /பெண்ணோ இருவருடைய சாதக கட்டத்திலும் சுக்கிரன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது இருந்து சுபரின் பார்வைபடாமல் மூன்று ,நான்கு ,ஐந்து,ஏழு,எட்டு மற்றும் பணிரெண்டாமிடத்தில் கூடியிருப்பின் அச்சாதகர் காம மிகுதியால் பலரது சுகம் பெற முயல்வர்.இவர்கள் வயதான நிலையிலும் காம இன்பம் பெறும் மனநிலையும் ,வலிமையும் உடையவராக இருப்பர்.

                இதேபோல மனதுக்காரகன் சந்திரபகவானோடு சுக்கிரபகவான் இணைந்திருப்பினும் தன்னைவிட வயதில் முதிர்ந்தவரை திருமணம் செய்துகொண்டு தனது காமபசியை போக்க மற்றவரது மஞ்சத்தில் மயங்கி கிடப்பாள்.இந்த அமைப்பினை சுபர் பார்க்க அல்லது சேர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி பலப்பட பலனில் மாறுபடலாம்.இந்த இணைவும் 3,4,5,7,8,12 ல் ஏற்பட்டால் கட்டாயம் மேற்கூரியவாறே நடக்கும்.

            ஒருவரது சாதகத்தில் சுக்கிரன் ,சனி ,செவ்வாய் மற்றும் ராகுபகவான் இணைந்து சுபர் பார்வை பெறாமல் 3,4,7,8,12 மிடத்தில் இருப்பின் தன்னிலும் தரம் கெட்டவனிடம் செக்ஸ் தொடர்பும் ,ஏற்றுக்கொள்ள முடியாத உறவுகளிடம் செக்ஸ் உறவும் வைத்துக்கொள்வார்.காமபிசாசாக இருப்பாள்.இவளின் உணர்விற்கு மற்றவர்களால் தீனிபோட இயலாது.

                ஒருவரது சாதகத்தில் சுபர் பார்வைபடாத சுக்கிரன் -சனி சேர்க்கை மற்றும் சுக்கிரன்-சனி-ராகு சேர்க்கையும் மேற்கண்ட ஸ்தானங்களில் ஏற்பட்டால் வெட்கம் கெட்ட காம உணர்வினை ஒருவருக்கு தர வாய்ப்பு உண்டு.

               ஒருவரது சாதகத்தில் மூன்றாமிடம் மற்றும் ஏழாமிட தொடர்பும் காமம் உணர்வு மேலோங்கி நிற்கும்.
இதேபோலவே மூன்று ,ஐந்து மற்றும் ஏழாமிட தொடர்பு அதாவது சேர்க்கை,பார்வை மற்றும பரிவர்தனை போன்ற சம்பந்தமானது ஒருவரது காம உணர்வினை மிகுதிபடுத்தி தடம் புரள வைக்கலாம்.

               ஒருவரது சாதகத்தில் சுக்கிரன்,ராகு ,செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு அற்று இயற்கை சுபரின் சேர்க்கையையோ அல்லது பார்வையையோ பெற்றவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய கொள்கையோடு வாழ்வார்கள்.இவர்களது சாதக கட்டத்தில் 3,4,5,7,8,12 ஆகிய ஆறு ஸ்தானங்களும் மேற்கண்ட கிரகங்களின் தொடர்பற்ற நிலையில் காணப்படும்.

நன்றி !.


(தங்களது குடும்ப அங்கத்தினர்களுக்கான சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை நீங்கள் எந்த நாட்டில் இருப்பினும் போன்வழியாகவே பெறலாம்.கட்டணம் உண்டு. தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையினை பெறலாம்.இமெயிலிலும் அனுப்பலாம் .)


தொடர்புக்கு
                                                       செல்                                                      97 151 89 647                                                                  740 257 08 99
                                                         வாட்ஸ்அப் எண்                                                                          97 151 89 647


My Email id
masterastroravi@ail.com

               
                                       


                                                         By
                                         Astro Ravichandran.
                                                       M.SC ,MA ,BEd,
                                                      Astro Researcher ,
                                  Omsakthi online astro consulting centre,
                                                 Karambakkudi,
                                                       Pudukkottai -District
                                                        Tamil nadu,India.

Sunday 22 January 2017

சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் யார் ?

சாதகரை வழி நடத்தி செல்லும் கேப்டனாக திகழ்பவர் யார் ?-ஒரு நீண்ட அலசல்.


செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் ஆசியுடன்...

             "அச்சாணி இல்லாத தேர் ஊர் போய் சேராது " என்பார்கள்.

                      ஒரு தேருக்கு அச்சாணியைப்போலவும் ,நீண்ட நெடிய கடல் பயணத்தை வழிநடத்தி செல்லக்கூடிய கேப்டனாகவும் இருந்து ஒரு சாதகருக்கு செயல்படக்கூடியவர் "லக்கனாதிபதியே "ஆகும்.

                          இதைப்போல ஒரு சாதகத்தின் பணிரெண்டு பாவங்களில் "லக்கனமே "முக்கியமான பாவமாகும்.லக்கினமும் ,லக்கினாதிபதியும் பலம் பெற்ற அமைப்பை பெற்றவர்கள் ஏனைய பிற அமைப்புகளோ அல்லது அவருக்கு நடைபெறக்கூடிய திசையோ உகந்ததாக இல்லாத சூழலிலும் மண்டியிட்டு இழுத்து போராடி வெற்றியடைந்துவிடுவார்.

                           ஒரு ஜாதகனின் அறிவு,அழகு,அந்தஸ்து,ஆரோக்கியம்,சாதனை புரிய தூண்டுவது ,கடின உழைப்பு ,நுண்ணறிவு மற்றும் தலைமையேற்று நடத்துதல் போன்ற தன்மைகளை லக்கின பாவகத்தினை கொண்டே அறியப்படுகிறது.
.
                 ஒருவரது சாதகத்தில் மிக முக்கியமானது  லக்கினமா ? லக்கினாதிபதியா ?
என விவாதம் நடத்தினால் என்னைப்பொருத்தவரையில் லக்கினாதிபதியே முக்கியமானவர் என்பேன்.

                                                             
              ஒருவன் குப்பையில் பிறந்திருந்தாலும் கோபுரகலசமாக உயர்ந்து நிற்க பேருதவி புரிபவர் இலக்கினாதிபதியே ஆவார்.ஒருவருக்கு லக்கினம் எதுவாக இருந்தாலும் இலக்கினாதிபதி வலிமை பெற்ற சாதகர் "தரித்திரத்தில் பிறந்திருந்தாலும் நிச்சயம் சரித்திரத்தில் இடம்பெறுவார் ".இலக்கினாதிபதி வலிமை பெற்ற சாதகர் எந்த வகையிலும் வெற்றி பெற்றே தீருவார்.

             ஒருவரது சாதகத்தில் இலக்கினாதிபதியானவர் உச்சம் ,மூலதிரிகோணம் ,ஆட்சி போன்ற நிலைகளில் பலமடைந்து கேந்திரகோணங்களில் நின்று பலமடைந்து இயற்கை சுபரின் பார்வையை பெற்று , இலக்கினாதிபதிக்கு சாரம் கொடுத்தவர் இலக்கின சுபராகி வலிமையடைந்திருந்தால் இலக்கினாதிபதியின் திசையில் சாதகர் யோகம் உள்ளவனாகவும் ,தீர்க்க ஆயுள் உடையவனாகவும் திகழ்வான்.

               ஒரு சாதகத்தில் இலக்கினாதிபதி பலமடைந்து லக்கினத்திற்கு மறைந்திருந்தாலும் , அவர் நின்ற வீட்டோன் இலக்கினத்திற்கு கேந்திரகோணங்களில் நின்று பலமடைந்து ,இலக்கினத்தையோ அல்லது இலக்கினாதிபதியையோ இயற்கை சுப கிரகமான குருபகவான் பார்க்க அந்த இலக்கினாதிபதி மறைந்திருந்தாலும் எப்படியும் முன்னேறிவிடுவான் .

           .இதுபோன்ற விதிவிலக்குகளும் உண்டு.எனவே இலக்கினாதிபதி மறைவு ஸ்தானமேறியிருக்கும்போது இதுபோன்ற விஷயங்களை கவனித்து பலனளிக்க வேண்டியது அவசியமாகும்.
                                                            
             சாதகரானவர் ஒரு கிரகத்தின் ஆதிபத்தியத்திற்குரிய பலனை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமாயின் அந்த கிரகத்திற்கும் மற்றும் இலக்கினாதிபதிக்கும் உள்ள தொடர்பை வைத்தே தீர்மாணிக்கப்பட வேண்டும்.இலக்கினாதிபதிக்கு தொடர்பு இல்லாத திசையில் அந்த திசைநாதனின் ஆதிபத்திய பலன்கள் சாதகருக்கு கிட்டாது.இதனை விரிவாக தொடர்ந்து பார்க்கலாம்.

              இலக்கினத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் கேந்திரகோணங்களில் இருந்து இவர்களுடன் இலக்கினாதிபதியின் பார்வை மற்றும் சேர்க்கை மற்றும் நட்சத்திர தொடர்பு இருந்தால் அந்த கிரகங்களின் திசை காலங்களில் அந்த கிரக ஆதிபத்தியத்திற்குரிய பலனை சாதகர் முழுமையாக அனுபவிக்க கூடிய யோகத்தினை சாதகர் பெறுவார்.

             அதே நேரத்தில் யோகம் தரக்கூடிய கிரகம் மேற்கூறிய வகையில் பலமடைந்திருந்தாலும் அக்கிரகமானது இலக்கினாதிபதிக்கு ஆறு ,எட்டு போன்ற இடங்களில் மறைவார் எனில் அக்காலங்களில் சாதகர் அக்கிரக ஆதிபத்திய பலனை முழுவதுமாக அனுபவிக்கும் யோகம் அற்றவராக இருப்பார்.

            இலக்கினத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் இலக்கினத்திற்கு மறைந்தாலும் அவர்கள் இலக்கினாதிபதி நின்ற வீட்டுக்கு மறையாமல் இருப்பின் அக்கிரக திசைகாலங்களில் ஆதிபத்திய பலனை அனுபவிக்கும் யோகம் பெறுவார்கள்.

                 இலக்கினத்திற்கு சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்கள் இலக்கினத்திற்கும் மற்றும் இலக்கினாதிபதிக்கும் மறைவுஸ்தானமேறில் அவை முழு மறைவு.அக்கிர திசை காலங்களில் முழுமையாக ஆதிபத்திய பலனை அனுபவிக்கவே இயலாமல் போய்விடும்.

                    இலக்கினத்திற்கு துர்ஸ்தானதிபதிகள் (6,8,12 ) அவரவர் வீட்டில் ஆட்சி பெற்று அவர்களுடன் இலக்கினாதிபதியும் சம்பந்தப்பட்டால் அக்கிரக திசை காலங்களில் அந்த ஆதிபத்தியத்திற்குரிய தீய பலனை சாதகர் அனுபவிப்பார்.
                                                      
                    ஒருவருடைய சாதகத்தில் ஒரு கிரகம் அசுப ஆதிபத்தியம் பெற்று இலக்கினாதிபதி நின்ற வீட்டிற்கு மறைவு ஸ்தானங்களில் நின்று திசையை நடத்தினால் சாதகர் அக்கிர ஆதிபத்தியத்திற்குரிய தீய பலனையையே அனுபவிப்பார்.

                 இலக்கினாதிபதி நின்ற வீட்டோன் உச்ச ஆட்சியோ பெற்றிருந்தாலும் அவர் இலக்கினத்திற்கும் ,இலக்கினாதிபதிக்கும் மறைவுஸ்தானமேறியிருந்தால் சாதகனின் வாழ்க்கையில் பிரச்சினைகளையும்,போராட்டங்களையுமே சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.

                ஒருவருடைய சாதக பலனை பார்க்கும்போது
"விதி கெட்டால் மதியை பார்க்க வேண்டும் என்பார்கள்.
மதியும் கெட்டால் கதியை பார்க்கவேண்டும் என்பார்கள்.
இந்த விதி,மதி மற்றும் கதி ஆகிய மூன்றும் கெட்டுவிட்டால் சாதகர் வாழ்வில் முன்னேற்ற பாதையில் அடி எடுத்தே வைக்க இயலாது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் துர்பாக்கியசாலிகள் ஆவார்.அவர்கள் இப்பிறப்பில் அவர்களது கர்மபலனை அனுபவித்தே தீரவேண்டும்.

                  இது என்ன ? விதி,மதி மற்றும் கதி என கூறி குழப்புகிறேன் என நீங்கள் நினைத்தால் தொடர்ந்து படித்து அதற்குரிய விளக்கத்தினை பெற முயலுங்கள்.

                 முதலில் இந்த "விதி "எனப்படுவது ஜாதகன் பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படுவது .இதனை நாம் லக்கனம் என்போம்.ஒரு நாளைக்கு ஒரு இலக்கினம்  இரண்டு மணிநேர வீதமாக பணிரெண்டு ராசிகளுக்கு மொத்தமாக இருபத்துநான்கு மணிநேரம் ஆகும்.அதாவது ஒரு நாள் ஆகும்.சாதகர் பிறந்தநேரத்தினை அந்த நாட்டின் சூரிய உதயத்தோடு ஒப்பிட்டு பார்த்து கணிக்கப்படுகிறது.
                                                                  


              அடுத்து இரண்டாவதாக" மதி" எனப்படுவது சாதகர் பிறந் நேரத்தில் வானவீதியில் தொடுவானத்தில் உள்ள நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாக கொண்டு அதன் அடிப்படையில் சந்திரபகவான் பிரவேசிக்கும் ராசி கண்டறியப்படுகிறது.இதனையே மதி என்போம்.

                 இறுதியாக" கதி " எனப்படுவது சூரிய பகவான் இடம்பெறும் ராசி ஆகும்.சூரியபகவான் ஒரு மாதத்திற்கு ஒரு ராசி வீதமாக சித்திரை மாதத்தில் தொடங்கி பங்குனி மாதத்தில் மீனத்தில் சென்றடைகிறது.சாதகர் பிறந்த மாதத்தின் அடிப்படையில் சூரியன் இருக்கும் இடமறிந்து அதனையே கதி என்கிறோம்.

                எனவே ஒருவருக்கு பலனளிக்க முற்படும்போது மேற்கண்ட வழிமுறைகளை இலக்கினமாக கொண்டு பலனறியப்படுகிறது.ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் பலன்களை சொல்வதற்கு விதி லக்கினம் மற்றும் மதி லக்கினம் இரண்டையும் அடிப்படையாக கொண்டே நாம் பலனளிக்கிறோம்.ஆனால் மேலை நாடுகளில் மட்டுமே சூரியலக்கினத்தை பயன்படுத்தியும் பலனளிக்கின்றனர்.

               பொதுவாக இலக்கினமும் ,இராசியும் ஒன்றாக கொண்டவர்களுக்கு யோகபலன்கள் வந்தாலும் இரட்டிப்பு மடங்கு நன்மையை தரும்.தீயபலன்கள் தந்தாலும் இரட்டிப்பு மடங்கு தீமையை தரும்.பொதுவாக இவர்களுக்கு ஜோதிடர்களால் தரப்படும் பலன்கள்  மாறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது.
                                                     
             ஆனால் இலக்கினமும் ,இராசியும் வெவ்வேறாக கொண்டவர்களுக்கு பலனளிப்பதில் ஜோதிடர்கள் தெளிவாக இருக்கவேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது.

               இவர்களுக்கு பலனளிக்க முற்படும்போது  இலக்கினம் மற்றும் இலக்கினாதிபதி இவர்கள் இருவரின் பலத்தையும் ,இதேபோல இராசி மற்றும் இராசிநாதன் இவர்களின் பலத்தையும் ஆராய்ந்து பார்த்து இவர்களில் யாருடைய பலம் மிகுந்திருக்கிறது என பார்த்து ஒரு சமயம் இலக்கினம் சார்ந்தவை வலுப்பெறும் போது அதிலிருந்நு எண்ணக்கூடிய ஸ்தான பலன்களை மிகுதியாக தரும்.

            ராசிநாதனிலிருந்து எண்ணக்கூடிய ஸ்தான பலத்தை குறைவாக தரும்.
அதேநேரத்தில் ராசி வலுப்பெறும்போது அவைகளில் இருந்து எண்ணக்கூடிய ஸ்தான பலத்தையே மிகுதியாக கொடுக்கும்.

           இலக்கினத்திற்கு அக்கிரகம் சுப ஸ்தானமாக இருந்தாலும் ராசிக்கு அக்கிரகம் பாவஸ்தானமாக இருந்தால் இரண்டில் யார் (லக்கினமா /ராசியா ) வலிமையுடையவர்களோ அவர்களது ஸ்தானபலம் அத்திசைகளில் மிகுதியாக இருக்கும்.

           எனவேதான் இலக்கினமும் ,இராசியும் வெவ்வேறாக கொண்டவர்களுக்கு நல்ல ஆராய்ச்சி திறன் கொண்ட சோதிடர்களாலே துல்லியமாக பலனளிக்க இயலும்.

               இதேபோல வேறு சில கருத்துக்களை ஆய்வு செய்து பார்க்க முற்படும்போது இலக்கினத்தில் இலக்கினாதிபதி நின்றாலும் மற்றும் பார்த்தாலும் இலக்கினமானது வலிமை பெறும் .மேலும் இயற்கை சுபகிரகங்களான குரு,பாவியோடு சேராத புதன் ,வளர்பிறை சந்திரன் மற்றும் சுக்கிரன் போன்ற கிரகங்கள் நின்றாலும் ,பார்த்தாலும் இலக்கினமானது பலப்படும்.இலக்கினத்திற்கு பொதுவாக இயற்கைபாவர்கள் தொடர்பு இல்லாமல் இருப்பது சாதகரை வளர்ச்சி பாதையில் இட்டுச்செல்லும்.

                  நிறைவாக இலக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெறுதல் ,இலக்கினாதிபதி கேந்திரகோணமேறுதல் ,சுபர்,யோகர் உடன் கூட்டு சேருதல் மற்றும் நவாம்சத்திலும் பலம் பெறுதல்.இலக்கினாதிபதியும் பலமடைந்து அவரோடு கூடியவரும் பலமடைந்து இவர்களின் சேர்க்கையானது பஞ்சமஹாயோகங்களில் அமைந்துவிட்டால் அந்த சாதகனை வழிநடத்தி செல்லும் கேப்டன் நன்முறையில் வழிநடத்தி வாழ்வில் சகலசொளபாக்கியங்களையும் அடையவைப்பார்.
                                                  
நன்றி.

(தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கு சாதகபலன் ,திருமணபொருத்தம் ,பரிகாரபூஜைகள் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்பி வைத்தல் போன்ற சேவைகளை போன்வழியாகவே நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் பெறலாம்.கட்டணம் உண்டு.தங்களது பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் விபரங்களை பெறலாம்.அல்லது எனது இமெயிலுக்கும் அனுப்பி வைக்கலாம். )


தொடர்பு கொள்ள
                                     செல்
                                  740 257 08 99
                                    97 151 89 647


                                வாட்ஸ்அப் எண்                                   

                                                     97 151 89 647


                                                    


                                                                        அன்புடன் ,
                                                                   சோதிடர்ரவிச்சந்திரன்                                                                                          M.SC ,MA,BEd,                                                                          சோதிட ஆராய்ச்சியாளர்,
                                                                         வாழ்வியல் ஆலோசகர்,                                                ஓம்சக்தி ஜோதிட ஆன்லைன்                                                                                                                   ஆலோசனை                                                                                                                                           மையம்,                                                                                                                                                                                                கறம்பக்குடி,புதுக்கோட்டைமாவட்டம்,                                                                               தமிழ்நாடு,இந்தியா.


My email idmasterastroravi@gmail.com