Thursday 24 December 2015

கிரக பார்வைகளும் அதனால் மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்களும்

கிரக பார்வைகளும் -மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும்

                                                        

பத்ரகாளியம்மன் துணை !

         "சாதக கட்டத்தில் கிரகங்களின் பார்வையால் மானிட வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

                              ஒருவருடைய சாதக கட்டத்தில் பணிரெண்டு ராசிகளில் தந்தைக்காரகன் எனப்படும் சூரியனும் ,சூரிய பகவானின் மைந்தனான சனி பகவானும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் சாதக அமைப்பை பெற்றவர்களின் தந்தை, மகன் உறவுநிலை சரியாக அமையாது.அவர்களுக்கிடைய சிறிய வெறுப்புணர்வு இருக்கும்.சில நேரங்களில் சுபரின் பார்வை மற்றும் ஓன்பதாமிட அதிபதியின் வலு ஆகியவற்றைப்பொறுத்து மேற்கண்ட பலன் மாறுபடலாம்.

                             இதேபோல சனி பகவானை குரு பகவான் பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் சனியின் ஆதிக்க பண்பு குறைந்து  குருவின் ஆதிக்கப்பண்பை  பெற்றுவிடுவார்கள்.நல்ல குணங்களே மேலோங்கி இருக்கும்.

                                                                                 மாறாக சனி பகவான் ,                                    குரு பகவானை பார்க்கும் அமைப்பை பெற்றவர்கள் குரு ஆதிக்கப்பண்பு குறைந்து சனி பகவானின் ஆதிக்கப்பண்பே மேலோங்கி நிற்கும்.இதேபோல குருவும் ,சனியும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளாமலே இருத்தல் நலம்.

                        அடுத்து "சனி பகவானும் ,செவ்வாய் பகவானும் சேர்ந்து ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது அந்த ஸ்தானத்திற்குரிய ஆதிபத்திய பலனை மாற்றி பாதிக்கவைத்துவிடும்.
உதாரணமாக "சனியும் செவ்வாயும் சேர்ந்து நான்காமிடத்தை பார்க்கும்போது அவனை காம எண்ணம் மிகுந்தவனாக மாற்றிவிடும்.
இதேபோல இரண்டாமிடத்தில் பார்த்தால் அவனது பேச்சில் சுத்தம் இருக்காது.ஏழாமிட பார்வை மனைவி அமைவது கால தாமதமாக்கிவிடுவதோடு மனைவியின் குணநலத்தையே(காம எண்ணம் மிகுந்தவளாக) மாற்றிவிடும்.இப்படியாக பார்க்கப்படும் ஸ்தான மற்றும் பார்க்கப்படும் கிரக குணநலன்களையே மாற்றிவிடும்.

.                       இதேபோல சனியும் செவ்வாயும் சமசப்தமாகவும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.இவ்வாறு பார்த்துக்கொள்ளும்போது வாகன விபத்துக்களை தந்து இரத்தம் கசிந்து எலும்பு முறிவு போன்றவற்றை செவ்வாய் திசை சனி புத்தியிலோ அல்லது சனி திசை செவ்வாய் புத்தியிலோ நிகழ வாய்ப்புண்டு.எத்சரிக்கையாக இருத்தல் நலம்.

                            அடுத்து சனி பகவானும் ,புதன் பகவானும் பார்த்துக்கொள்ளாமல் இருத்தல் நலம்.அவ்வாறு பார்த்துக்கொள்ளும் புதன் பகவான் தரக்கூடிய கணிதம்,எழுத்து ,கவிதை ,ஜோதிடம் போன்ற நுணுக்க விஷயங்களை தரவிடாமல் செய்துவிடுகிறது.
அதிலும் புதன் மற்றும் சனி பகவான் இருவரும் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது சாதகரை அலித்தன்மை உடையவராக ஆக்கிவிடுகிறது.

                                  குரு பகவானும்,சந்திர பகவானும் பார்த்துக்கொள்ளும்போது "குரு-சந்திர யோகத்தை தருகிறது.இந்த யோகம் தர இரு கிரகங்கள் சேர்ந்து இருக்கும் வீட்டின் அதிபதி மறைவு,நீசம் ,அஸ்தனம் போன்ற பலவீனமான அமைப்பை பெறக்கூடாது.மேலும் ராசியை பொறுத்து இரண்டில் ஒன்று பாதாகாதிபதியாகவோ ,மாரகாதிபதியாக இருக்ககூடாது.

                             அடுத்தபடியாக " காம கிரகம் மற்றும் ஆண்,பெண் இருபாலருக்கும் களஸ்திரகாரகன் எனப்படும் சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது காம எண்ணம் மிகுதியாக்கிவிடுகிறது.

                             மனதுக்காரகன் எனப்படும் சந்திர பகவானை  ,சுக்கிர பகவான் சமசப்தமாக பார்த்துக்கொள்ளும்போது காமம் சம்பந்தப்பட்ட கற்பனை மிகுதியாக இருக்கும்.ஒரு சிலர் காம கதை ,கவிதை ,சினிமா மற்றும் பாடல்கள் அமைப்பதற்கும் இவையே காரணம்.சுக்கிரன் உச்சம் ஆட்சி போன்ற பலம் பெற்றிருக்க வேண்டும்.

                         ஒருவரது சாதகத்தில் சூரியனும்,சந்திரனும் சமசப்தமாக 180  பாகையில் சந்தித்துக்கொள்ளும்போது  "பொளர்ணமி யோகத்தை "வழங்குகிறது.இவர்கள் பொளர்ணமி நாளில் பிறந்திருப்பார்கள்.சில நேரங்களில் இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காம எண்ணம் குறைவாகவே பெற்றிருப்பார்கள்.

                            குரு பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்திற்கே அதிக பலன்களை தருவார்.பொதுவாக இருக்கும் இடத்திற்கு அதிக அளவு நன்மைகளை செய்யமாட்டார்.அதிலும் குறிப்பாக குரு தனித்து நின்றால் அந்த இடத்தை பாதிப்பார் என்பதால்தான் "அந்தணன் தனித்து நின்றால் அந்த இடம் நாசம் என்பார்கள்".
சனி பகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கப்படும் இடத்தை அதிகம் பாதிப்புக்கு உள்ளாக்குகிறார்.

                                ராகு பகவான் ,கேது பகவான்  மற்றும் செவ்வாய் பகவான்,சனி பகவான், தேய்பிறைச்சந்திரன் மற்றும் பாவியோடு சேர்ந்த  புதன்  பகவான் போன்ற இயற்கை பாவிகளால் பார்க்கப்படும் அந்த ஸ்தானமும்  அதில் உள்ள கிரகங்களின் தன்மையை எதிர்மறையாக மாற்றி  கெடுதல் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

                      அதே நேரத்தில் இயற்கை சுபரான குரு பகவான்,சுக்கிர பகவான்,வளர்பிறைச்சந்திரன்,பாவியோடு சேராத புதன் பகவான் ஆகிய கிரகங்கள் பார்க்கப்படும் ஸ்தானமும் ,கிரகங்களும் பாவ கிரகங்களாக இருந்தாலும் அதனால் கிடைக்கும் பாதிப்பை இல்லாமலோ அல்லது குறைத்தோ அதன் பலனை மாற்றி நேர்மறையாக மாற்றிவிடுகிறார்கள்.

                         எனவேதான் மேலோட்டமாக ஒரு சோதிட பதிவை படித்துவிட்டு ஆகா எனது சாதகத்திலும் இதுபோன்ற அமைப்பு இருக்கிறதே என வருத்தப்படுவதோ அல்லது அவ்வாறு நடக்காமல் போகும்போது நீங்கள் கூறியது போல எனக்கு அந்த அமைப்பிருந்தும் கெடுதலான பலனை தரவில்லை ? என கேள்வி கேட்டு எதிர்வாதம் செய்வது தவறு.
சோதிடர்களாகிய நாங்கள் பதிவுகளை பதிவிடும்போது ஒரு சாதக பலன்கள் கூறுவதற்கான எல்லா கோணங்களையும் ஒரே பதிவில் விளக்கிவிட முடியாது.

                       ஒரு உதாரணத்தின் மூலமாக இவற்றை விளக்கிவிடுகிறேன்.சற்று பொறுமையாக மனதை இங்கு செலுத்தி படியுங்கள்.

                               ஒரு பெண்ணிற்கு கற்பு ஸ்தானமான நான்காமிடத்தில் "சனி பகவானும்,செவ்வாய் பகவானும் சேர்ந்திருக்கும்போது அந்த பெண் காம எண்ணம் மிகுந்தவளாக ,தவறு செய்யும் ஆசையுடையவளாக இருப்பாள் என நான்  எனது பதிவில் பதிந்திருப்பது "பெது பலன்".நான் கூறிய இந்த பொதுப்பலனை மட்டும் வைத்துக்கொண்டு பெண் பார்க்கும் படலத்தில் அப்ளை செய்து (பதிலீடு ) பார்த்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் சாதகத்தில் நான்காமிடத்தில் சனி,செவ்வாய் சேர்ந்திருந்த பெண்ணை தேர்ந்தெடுக்காமல்  விட்டுவிடுவீர்கள்.

                               ஆனால் அந்த பெண்ணை விசாரித்து பார்க்கும்போது நல்ல குணநலவாதியாகவும்,நன்கு கல்வி புலமை பெற்றவளாகவும் இருப்பாள்.நான் கூறிய பொதுப்பலனை மட்டும் தேடியதால் ஒரு நல்ல பெண்ணை சந்தேகம் கொண்டு தவிர்த்துவிடும் துரதிஷ்ட நிலைக்கு ஆளாகிவிடுவாய்.

                                  ஏன் நாலில் "சனி ,செவ்வாய் சேர்ந்திருந்தும் அந்த மாதிரியான பலனை தராமல் போவதற்கு சோதிட சூட்சுமம் அறிந்த சோதிடர்களுக்கு மட்டுமே புரிந்த சில
"சிறப்பு காரணங்களும்" உள்ளது.


                              அது என்னவெனில் சேர்ந்திருக்கும் இரு கிரகங்களில் ஏதாவது ஒரு கிரகம் நீசம் போன்ற பலவீனம் அடைந்திருருக்கலாம் அல்லது இரு கிரகங்களும் சுப நட்சத்திர காலில் நின்றிருக்கலாம் அல்லது குரு பகவான் போன்ற சுப கிரகங்களின் பார்வையை பெற்றிருக்கலாம் அல்லது நான்காமாதிபதி ஆட்சி உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருக்கலாம்.இதுபோன்ற அமைப்புகளில் ஏதேனும் ஒரு அமைப்பை பெற்றிருந்தாலும்  அந்த பெண் நாலில் சனி செவ்வாய் சேர்ந்திருந்தாலும் நல்ல குணநலவாதியாக இருப்பாள்.

                       எனவே "அன்பார்ந்த சோதிட ஆர்வலர்களே மேலோட்டமாக நாங்கள் பதியும் பதிவுகளை படித்துவிட்டு தவறான முடிவுகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.தவறான முடிவினை தாங்களே எடுத்துக்கொண்டு பிறகு சோதிடமே தவறு என இன்றைய கற்ற இளைஞர்கள் எதிர்விவாதம் செய்யாதீர்கள்.தங்களைப்போன்றே  கல்லூரியில் படிக்கும் காலங்களில் சோதிடம் என வாதம் புரிந்தவன்.

                        எனது தாய் மாமவும்,சோதிடரும் ஆன மரியாதைக்குரிய கலியுகம்பிள்ளை அவர்கள் எனது சாதகத்தில் புதனும் ,குருவும்
உச்சம் ,ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதால் பிற்காலத்தில் பார் போற்றும் சோதிடராக வருவாய் எனவும் ,வாக்கு ஸ்தானத்தோடு ஞானக்காரகன் கேது பகவானின் தொடர்பு இருப்பதால் சோதிட சூட்சுமமும் பெறுவாய்.உனது வாக்கு பலிக்கும் என்பதை படிக்கும் காலம்வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. சோதிடம் கற்று தருகிறேன் என அழைத்த போதெல்லாம் மறுத்து வந்தேன்.


                  எனக்கு திருமணமாகி ஒரு மாதம் கழித்து அவரே நோட்டு வாங்கிவந்து அதில் பிள்ளையார் சுழி போட வைத்து விநாயகர் சுலோகம் மனப்பாடம் செய்யவைத்து குரு தட்சனையாக பத்து ரூபாய் வாங்கி சென்றார்.அன்று மறுத்தவன் இன்று எனது முகநூலின் பக்கம்(Page) பகுதியில் மூன்று பக்கங்களை திறந்து உள்ளேன்.

         அதில் 1) சோதிடர் ரவிச்சந்திரன் -இந்த பக்கத்தில்(Page) எனது சோதிடம் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பதிவுகள் இருக்கும்.இதில் "கிரகங்கள் படுத்தும் பாடு " எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.விருப்பமுடையவர்கள் முகநூல் பக்கம் பகுதியில் தேடி லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.

           2) கவிதை நான் சொல்லவா -எனும் முகநூலில் பக்கம்(Page) பகுதியில் கவிதைகள் பல பதிந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுவீர்.

          3) "வாழ்வியல் சிந்தனைகள்"-என்ற பக்கம்(Page)  சோதிடம் அல்லாத வாழ்க்கைக்கு பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.விருப்பமுடையவர்கள் லைக் செய்து இணைந்திடுங்கள்
இதுமட்டுமல்லாமல் முகநூல் குரூப்(Group) பகுதியில் "சோதிடர் ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை " என்ற குரூப்(group) ஆரம்பித்து "கற்றதையும்,பெற்றதையும் மற்றவர்களுக்கு பகிர்வோம்" எனும் கருத்தின் அடிப்படையில் சோதிட கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.

                  இது மட்டுமல்லாமல் சோதிட ஆலோசனையை வீட்டிலிருந்தபடியே தங்களது சாதகங்களுக்கு போனின் மூலம் பலன்பெற விரும்புகிறவர்களுக்கு சோதிட பலன்களை கட்டண அடிப்படையில் பலன் கூறி வருகிறேன்.பலர் எனது வாட்ஸ்அப்  மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது போனின் மூலமாகவோ தொடர்புகொண்டு பலன்பெற்று வருகிறார்கள்.ஆசிரிய பணியோடு இப்பணியும் சிறப்பாக நடைபெற்று வருகிறது."

                 படிக்கும் காலத்தில் சோதிட துறையை மறுத்தவன் என்னையறியாமலே இதில் என்னை நுழைய வைத்து இன்று முழுநேரம் சோதிடத்திற்கு செலவிட வைத்துவிட்டது.சோதிடம்  எவ்வளவு உண்மை  என்பதை எனது அனுபவத்திலிருந்து விளக்கவே மேற்கண்ட இன்றைய எனது நிலையை விளக்கினேன். படிக்க படிக்கவும் ,பலன் கூற கூறவும் அதன் சூட்சும விஷயங்கள் பரம்பொருளின் அருளால் எனக்கு புரிந்துவருகிறது.

                                 எனது ஒரே ஆசை இன்றைய இளைஞர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவியல் அடிப்படையில் விளக்கி இது ஒரு அறிவியலின் ஒரு பிரிவு என புரிய வைக்கவேண்டும் என்பதே ஆகும்.
வாழ்க நிறைவான ஆனந்தத்துடன்.நன்றி.

                                                



                                                        அன்புடன்,
               சோதிடர்  
சோப..ரவிச்சந்திரன்
         M.SC,M.A,BEd
            ஆசிரியர்  &சோதிட ஆய்வாளர்,
  ஓம் சக்தி  ஆன்லைன்ஜோதிட ஆலோசனை மையம், 
        கறம்பக்குடி,
 புதுக்கோட்டை மாவட்டம்
           தமிழ்நாடு.



  செல் : 

    97 151 89 647                                        740 257 08 99
                                                          whatsup no                                                                  97 151 89 647


Email ; masterastroravi@gmail.com

My facebook  link
m.facebook.com/ravichandran3538039


(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

.....,.   ......    .......     .......   ........  ......

Tuesday 22 December 2015

யோகமான அமைப்பு சாதகங்களில் இருந்தும் அவை யோகங்களை தராதது ஏன் ? ஓர் விரிவான அலசல்

யோகமான அமைப்புகள் சாதகங்களில் இருந்தாலும் அவை பயன் தராமைக்கு காரணம் என்ன ?

                                                          

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !


                                    "ஒரு மனிதனின் சாதகத்தில் யோகமான அமைப்புகள் பல இருந்தாலும் அவை யோகங்களை தராமல் மாறாக அந்த திசை  முழுவதும் கஷ்டங்களை தந்துவிடுகிறது.அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக ஆராய்வோம்.

                                ஒருவருடைய சாதக கட்டத்தில் சுபர்கள் என அழைக்கப்படும் குரு,சுக்கிரன்,வளர்பிறைச் சந்திரன் மற்றும் பாவியோடு சேராத புதன் போன்ற கிரகங்கள் கேந்திர ஸ்தானம் என அழைக்கப்படும் ஒன்று,நான்கு ,ஏழு மற்றும் பத்து போன்ற இடங்களில் அமர்ந்து ஆட்சி ,உச்சம் போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும்,சுப ஸ்தான ஆதிபத்தியம் பெற்றிருந்தாலும் அவை "கேந்திராதிபதி தோஷம் பெற்றுவிடுவதால் நன்மை செய்வதற்கு பதிலாக பாதகங்களையே செய்துவிடுகிறது.

                                இதுபோன்ற அமைப்புடைய கிரகங்கள் மறைவு ஸ்தானங்களான ஆறு,எட்டு ,பணிரெண்டு போன்ற இடங்களிலோ அல்லது திரிகோண ஸ்தானங்களில் அமர்ந்தால்தான் அதன் திசை காலங்களில் நன்மையை செய்துவிடுகிறது.

                              இதே சுபரான கிரகங்கள் ஒருவரின் சாதகத்தில் உபய ராசிகளான மிதுனம்,கன்னி,தனுசு மற்றும் மீனம் போன்ற ராசிகளை தனது ராசியாக பெற்றவர்களுக்கு தனது ஏழாமிடமான மனைவி ஸ்தானமானது பாதகாதிபதி ,மாரகாதிபதி ஆகிய இரண்டையும் பெற்று இருப்பதால் அவை கேந்திரங்களிலும் அமர்ந்தால் மேலும் கேந்திராதிபதி தோஷத்தையும் பெற்றுவிடுகிறது.எனவே இதன் திசை காலங்களில் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் சாதகங்களை தருவதை விட பாதகங்களை அதிகமாக செய்துவிடுகிறது.

                             எனவே உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை  பெற்றிருக்கிறது என மேலோட்டமாக பலன் கூறினால் உங்களது பலன் தவறாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு.

                             இதில் நாம் இன்னும் தெரிந்த கொள்ளவேண்டியது என்னவெனில் உபய ராசிக்காரர்களுக்கு மனைவி ஸ்தானம் எனப்படும் ஏழாமாதிபதி ஏழிலே உச்சம் ,ஆட்சி போன்ற அமைப்பை பெறும்போது மேற்கண்ட மூன்று (பாதகாதிபதி,மாரகாதிபதி மற்றும் கேந்திராதிபதி ) விதமான பாதிப்புக்கு உள்ளாகுவதால் இதுபோன்ற அமைப்புடையவர்கள் அவர்களுக்கு வரும் மனைவியால் தொல்லையே வர வாய்ப்பு உண்டு.இதில் லக்கனாதிபதி கெட்டு (பலவீனமடைந்து ) விட்டால் மனைவியின் கருத்தைக்கேட்டு நடக்கும் பொண்டாட்டிதாசர்களாகி
விடுவார்கள்.


                             மாறாக லக்கனாதிபதியும் உச்சம்,ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றுவிட்டால் அங்கே "கிரக யுத்தம் " ஏற்பட்டு  நீ பெரியவனா ? நான் பெரியவளா ? எனும் கருத்து ஈகோ ஏற்பட வாய்ப்புண்டு.இருவரும் நன்றாக படித்திருப்பார்கள்.இருப்பினும் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் இடையே ஒரு அன்யோன்யம் ஏற்பட வாய்ப்பு குறைவு.இதுபோன்ற அமைப்பை தங்களது சாதகங்களில் பெற்றிருப்பவர்  நமக்கு சரியான மனைவி அமையாமைக்கு நமது கிரக அமைப்பே காரணம் என ஒருவர் தெரிந்துகொண்டால் அதனால் வரும் மனக்கஷ்டங்களிலிருந்து அலட்டிக்கொள்ளாமல் விதிப்பயன் என எண்ணி தாமரை இலை தண்ணீர் போல பற்றற்ற வாழ்வை மேற்கொள்ளலாம்.

                          இதே போல ஒருவரது சாதக கட்டத்தில் பாவ கிரகங்கள் என அழைக்கப்படும் சனி,ராகு ,கேது ,பாவியோடு சேர்ந்த புதன் ,தேய்பிறைச் சந்திரன் போன்ற கிரக பகவான்கள் திரிகோணங்களில் அமராமல் கேந்திரங்களில் அமரல் சுபம்.மாறாக திரிகோணங்களில் அமரும்போது அதன் திசை, புத்தி காலங்களில் யோகத்தை செய்யாமல் தொல்லைகளையே வழங்கும்.

                                  அடுத்து மறைவு ஸ்தானம் என அழைக்கப்படும் ஆறு ,எட்டு ,பணிரெண்டு போன்ற ஆதிபத்திய  கிரகங்கள் ஒரு ஸ்தானங்களோடு சேரும்போதோ அல்லது பார்வை பெறும்போதோ  சேர்ந்திருக்கக்கூடிய கிரகங்கள் தனது சுயத்தன்மையை இழந்து அந்த ஸ்தானம் பாதிக்கப்பட செய்துவிடுகிறது.மேலும் இந்த மறைவு ஸ்தான கிரகங்களும்  இயற்கை பாவ கிரகங்களாக இருந்தால் அந்த ஸ்தான கிரகங்கள் என்னதான் உச்சம் ஆட்சி போன்ற பலமான அமைப்பை பெற்றிருந்தாலும் அதன் பலனை தர விடாமல் செய்துவிடுகிறது.மேலும் இந்த மறைவு ஸ்தானங்களில் சுப ஆதிபத்திய கிரகங்கள் இருந்தாலும் அக்கிரகங்களால் கிடைக்கும் நன்மைகள் கிடைக்க விடாமல் செய்துவிடுகிறது.

                               லக்கனத்திலோ அல்லது லக்கனாதிபதியோட தொடர்பைப்பெறும்போது  அந்த சாதகனை நோய் ,கடன் மற்றும் எதிரி போன்றவர்களால் தொல்லையை தர வைத்துவிடுகிறது.மேலும் சாதகனை  லக்கன ஆதிபத்தியத்திற்கு உரிய குணங்களிலிருந்து அவனை மாற்றிவிடுகிறது.இன்னும் பாவியாக இருப்பின் அதிக இன்னல்கள்களை தந்துவிடும்.லக்கனாதிபதி மறைவு ஸ்தானங்களுக்கு சென்று குடியேறினால் சாதகர் சோம்பேறியாகவும்,சுறு சுறுப்பு தன்மை அற்றவராக மாறிவிடுவார்.

                     இரண்டாமிடம் அதன் அதிபதி தொடர்பு மற்றும் சேர்க்கை பெறின் அவரை  தனம்,வாக்கு ,கல்வி ,குடும்பம் மற்றும் நேத்திரம் போன்ற ஸ்தனங்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.அந்த ஸ்தான கிரகங்கள் இயற்கை.பாவியாக இருப்பின் சிலருக்கு கால தாமத திருமணத்தை தந்துவிடுகிறது.

                    இதேபோல மறைவு ஸ்தானத்திற்கு இதன் அதிபதிகள் சென்று மறைந்துவிட்டால் தன யோகம் சிறிதுமின்றி கஷ்டப்படுவார்.குடும்பத்தில் சிறுவயதிலிருந்து தங்காமல் விலகி இருப்பார்.


               நான்காமிடம் மற்றும் அதன் அதிபதியோடு மறைவு ஸ்தானதிபதிகள் தொடர்புகொண்டாலோ அல்லது பார்வை செய்தாலோ  ஒருவருக்கு தன் சுகம்,தாய் சுகம் ,உயர் கல்வியால் ஏற்படும் சுகம் மற்றும் வீடு ,வண்டி வாகனங்களால் பெறப்படும் சுகங்களை கெடுத்துவிடுவார்.மேலும் ஒருவரின் கற்பு ஸ்தானமாகவும் அமைவதால் அவை ஒருவரின் குணத்தை கெடுத்து விடும்.

              ஐந்தாமிடம் மற்றும் அதன்பதிகளோடு தொடர்பு மற்றும் சேர்க்கை பெறும்போதோ அல்லது இந்த மறைவு ஸ்தானங்களில் ஐந்தாமாதிபதி அமர்ந்து அவை இயற்கை பாவராக அமைந்தால் புத்திர தோஷம் ஏற்பட்டு புத்திரபாக்கியம் தடைபடும்.(புத்திரகாரகன் குரு பலம் பெற்றிருந்தால் பலம் மாறும்),மீறி புத்திரர்களே இருந்தாலும் அவர்களலால் சுகம் பெறும் யோகம் குறைவு, மேலும்
பூர்வீக  மனையில் இல்லாமல் இருத்தல் நலம்.பூர்வீக சொத்து இல்லாமல் இருக்கும்.அப்படியே இருந்தாலும் அவை பிரச்சினையாக இருக்கும்.நல்ல புத்தி ,கற்பனை ,யுக்தி ,சிந்தனை தருவதற்கு பதிலாக சூழ்ச்சி ,வஞ்சகம் ,கபடம் மற்றும் காமம் போன்மவைகளை தரும்.அறிவில் சிறந்த சான்றோர்களோடு பழகுவதற்கு பதிலாக தரம் தாழாந்த மனிதர்களோடு பழக்கவழக்கம் ஏற்படும்.


               அடுத்து ஏழாமிடம் மற்றும் அதிபதிகளோடு மறைவு ஸ்தானங்கள் தொடர்பு மற்றும் சேர்க்கை பெற்றாலோ அல்லது மறைவு ஸ்தானங்களில் இதன் அதிபதிகள் அமர்ந்தாலோ ஒருவருக்கு தாமத திருமணம்தான் அமையும்.அவை இயற்கை பாவியாக அமைந்து விட்டால் மனை மற்றும் மனையால் வரும் சுகம் குறைவு.கற்ற மனைவியாக அமைவதும்,குணநலவாதியாகவும் அமர்வது சிரமம்.
ஒன்பதாமிடம் மற்றும் அதன் அதிபதி இந்த மறைவு ஸ்தான அதிபதிகள் தொடர்பு சேர்க்கை பெறும்போதும்  அந்த சாதகர் தான தர்ம குணங்கள் இருக்காது.தந்தையால் எவ்வித பலனையையும் எதிர்பார்க்க முடியாமல் போய்விடுகிறது.சம்பாரிக்கின்ற பணம் தவறான வழிகளில் செலவாகிவிடும்.மேலும் ஒன்பதாமாதிபதி மறைவு ஸ்தானத்திற்கு சென்றால் (தந்தைகாரகன் சூரியனும் பலவீனம் அடைந்திருந்தால் ) தந்தை இருக்கமாட்டார்.சிறு வயதிலே இழந்திருக்க வாய்ப்புண்டு.அப்படியே இருந்தாலும் அவரால் எவ்வித பலனும் கிடைக்காது.வருமானம் ஏதுமின்றி தவிப்பர்.மேல்நிலை கல்வி பாதிக்கப்படலாம். 

               பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதிகள் மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளின் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றால் அரசுக்கு விரோதமான தொழிலில்  ஈடுபாடு  ஏற்படலாம்.அதிலும் மறைவு ஸ்தான கிரகங்கள் பாவிகளாக இருப்பின் குற்றங்களை கண்டறியும் போலிஸ்(பத்தில் செவ்வாயாக இருப்பின்),இராணுவம் மற்றும் வழக்கில் பிரச்சினையை தீர்க்க கூடிய  வழக்கறிஞராக ஆகலாம்.
மேலும் பத்தாமாதிபதி மறைவு ஸ்தானங்களுக்கு சென்றால் கேந்திராதிபதி தோஷம் நீங்கி மறைவான லாட்டரி சீட்டு ,பைனான்ஸ் போன்ற உழைப்பில்லாத அரசுக்கு விரோத தொழில் உண்டாகும்.


                          பதினொறாமிடம் அதன் அதிபதிகள் மறைவு ஸ்தான அதிபதிகள் இடம்பெறும்போது தான் செய்கின்ற தொழிலில் லாப பங்கம் ஏற்பட்டுவிடும்.மூத்த சகோதர ஸ்தானம் பாதிக்கப்படும்.மேலும் பதினொறமிட அதிபதி மறைவு ஸ்தானத்திற்கு செல்லும்போது எவ்வித லாபங்களையும் தருவதில்லை.வெளிநாட்டு யோகம் தருவதில்லை.மூத்த சகோதரம் இருக்காது.

        மறைவு ஸ்தான அதிபதிகளான மூன்று ,ஆறாமிடம்,எட்டாமிடம் மற்றும் பணிரெண்டாமிட அதிபதிகள் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் விபரீத ராஜயோகத்தை தந்துவிடுகிறது.அதாவது தாம் சார்ந்த துறையில் எதிர்பாராத லாபம் ,பதவி உயர்வு போன்றவற்றை தந்துவிடுகிறது.இதுபோன்ற விபரீத ராஜயோகம் அமைப்பை பெற்றிருந்தாலும் அதற்குரிய மறைவு அதிபதிகளின் திசை நடந்தால் ஒழிய யோகத்தை தராது.சிலருக்கு அவ்வித திசைகளை தம் வாழ்வில் ஒருவர் சந்திக்க முடியாமல் அதாவது வராமலே போய் அந்த யோகத்தை பெற முடியாமல் போய்விடுகிறது.

                             இதேபோல ஒருவர் தனது சாதகத்தில் குரு -சந்திர யோகம்,தர்ம -கர்மாதிபதி யோகம்,குருமங்கள யோகம்,பிருகுமங்கள யோகம் மற்றும் பஞ்சமகா யோகங்களை பெற்றிருந்தாலும் அந்த யோகங்களை செய்ய முடியாதபடி அந்த கிரகங்களில் ஒன்று பாதகாதியாக அமைந்துவிடுவதால் அந்த யோகங்களை தராமல் செய்துவிடுகிறது.

                                                         பாதகாதியானது

                                                சர ராசிக்கு -11-ம் அதிபதி
                                                      ஸ்திர ராசி -9 ஆம் அதிபதி
                                                உபய ராசி - 7 ஆம் அதிபதி.


                            உதாரணமாக மேஷ ராசிக்கு தர்ம-கர்மாதிபதி யோகத்தை பார்க்கும்போது ஒன்பதாம் அதிபதி குருவும்,பத்தாம் அதிபதி சனியும் இணைந்து அல்லது பரிமாறி அல்லது பார்வை பெற்றிருக்கும்போது தர்ம -கர்மாதிபதி யோகமெனிலும் சனி பகவானுக்கு பத்து மற்றும் பதினொன்று என இரு ஆதிபத்தியம் பெறுவதால் சர ராசிக்கு பதினொறாம் அதிபதி பாதாகாதிபதி எனும் மற்றொரு ஆதிபத்தியம் பெற்று யோகபங்கம் உண்டாகிவிடுகிறது.

                         எனவே "யோகமான அமைப்புகள் ஒருவரது சாதகங்களில் இருந்தும் யோகம் செய்வதற்கு பதிலாக யோகபங்கம் ஏற்பட்டுவிடுகிறது ஏன் என ஆராய்ந்து பார்க்கும்போது இதுபோன்ற இன்னும் பல காரணங்கள் உள்ளது.அவை அனைத்தையும் ஒரே பதிவில் விளக்கினால் உங்களுக்கு புரியாமலோ அல்லது ஒருவித சலிப்பு தன்மையோ ஏற்பட்டு விடலாம் என்பதற்காக இப்பதிவை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

                     (தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                                                    

அன்புடன்
சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
சோதிட ஆராய்சியாளார்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
ஓம் சகதி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,


செல் : 

       97 151 89 647                    

         740 257 08 99


      WHATSUP NO                    

            97 151 89 647


My Email:
masterastroravi@gmail.com


To know more information in Astrology field join my facebook friend
My facebook link
m.facebook.com /ravichandran3538039

Wednesday 9 December 2015

கிரகங்களின் சேர்க்கையும் அதனால் உண்டாகும் பலன்களும்

                          

கிரகங்களின் சேர்க்கைகளும் அதனால் உண்டாகும் பலன்களும்


                                                                   

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !
                                                                ஒருவரின் குணநலன்கள் அவரோடு சேர்ந்து இருக்கும் நபரின் தன்மையைப்  பொறுத்து மாறுபடுவதுபோல "கிரகங்களும் தன்னுடன் சேர்ந்துள்ள மற்ற கிரகங்களின் தன்மையைப் பொறுத்து மாறுபடுகின்றன்".

                                                         நீரானது தான் சார்ந்துள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்றார்போல தனது தரம் மாறுவதுபோல மனிதர்களின் வாழ்வில் கிரகங்கள் படுத்தும் பாடானது அவை சேர்ந்துள் கிரகங்களுக்கு ஏற்றார்போல மாறுபடுகிறது.

                                                  ஒருவரின் சாதகத்தில் சூரியன் மற்றும் சந்திரன் தனித்தனியாக இருக்கும்போது அதன் காரகம் மற்றும் ஸ்தானத்திற்கு ஏற்றார்போல பலன்களை கொடுத்தலும் அவை இரண்டும் சேர்ந்து இருக்கும் போது "அமாவாசை யோகத்தை " வழங்குவார்.இவ்விதமாக அமாவாசையில் பிறந்தவர் திருடனாக இருப்பார் என ஒரு விதமான அபிப்ராயமும் மக்கள் மத்தியில் உள்ளது.இதற்கு காரணம் மனிதன் என்ற ரஜினி படத்தில் அமாவாசையில் பிறந்ததால் அவன் திருடனாகி  சிறைக்கு சென்று விட்டது போல படம் எடுத்திருப்பார்கள்.

                                                                    


                    அந்த படத்தில் வரும் ஒரு பாடலில்

"வானத்தை பார்த்தேன் பூமியைப் பார்த்தேன் மனிதனை இன்னும் பார்க்கலேயே ?
உள்ளே உள்ள அத்தனை பேரும் குற்றவாளி இல்லைங்க
வெளியில் உள்ள அத்தனை பேரும் புத்தன் காந்தி இல்லைங்க !
பலநாள் இருந்தேன் கருவறையில்
சிலநாள் இருந்தேன் சிறையறையில்
அம்மா என்னை ஈன்றது "அமாவாசையாம்"
அதனால் பிறந்து தொல்லையடா
ஆனால் என் மனம் வெள்ளையடா !


                  என ஒரு பாடலும் அப்படத்தில் வைக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் இதுபோன்ற கருத்துக்கள் எளிதாக பரவியது.ஆனால் பொதுவாக சந்திரன் மனதை ஆட்டுவிப்பவர்.அவர் சூரியனுடன் சேரும்போது ஒரு சில மனக்குழப்பங்களை கொடுக்கும் என்பது மட்டும் உண்மை.
இங்கு சூரியன் என்பவர் அப்பா,சந்திரன் என்பவர் அம்மாவின் காரகர் ஆவார்.இவ்விரண்டு கிரகங்களும் சேர்ந்து பணிரெண்டாம் இடத்தில் இருந்தால் அவை தரும் பலன்களை பின்வரும் பாடல் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

"ஆறுமி ஆறு தன்னில் அம்புலி கதிரோன் சேர 
கூறுவாய் ஈனன் என்று கொடும்பிணி விரோதன் என்று 
சீருள அன்னை தந்தை செல்வமும் விரயமாவதோடு
வேறு  வேறு ஆவார் என்பது வேதியர் உரைத்த வாக்கு "


                 மேற்கண்ட பாடலிருந்து "சூரியன் பகவான் சந்திர பகவானோடு பணிரெண்டில் சேர்ந்து இருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை பிறந்தால் பாவம் சீரோடும் ,சிறப்போடும் வாழ்ந்து கொண்டிருந்த அம்மா மற்றும் அப்பா தனித்தனியாக பிரிந்து வாழ்வார்.அவர்களது செல்வமெல்லாம் குறைந்து போகும்.அவன் கெட்டவனாகவும் பெயரெடுப்பான்.பாவம் விதிப்பயனை  என்ன செய்வது ? -இப்படி ஒரு பிள்ளை பிறந்ததற்கு பிறக்காமலே இருந்திருக்கலாம்.

                  இதே போல சூரியனும்,சந்திரனும் சேர்ந்து நான்கமிடத்தில் இருந்தால் அவர்களது குணத்தை கெடுக்கும்.
இதேபோல் குருவும் ,சந்திரனும் சேரும்போது
"குருசந்திர யோகத்தை" வழங்குவார்.ஆனால் குருவோ அல்லது சந்திரனோ பாதகாதிபதியாக வராமல் இருக்க வேண்டும்.
குருவும்,சந்திரனும் சேர்ந்து ஏழில் இருக்க கூடாது.

          "பால்மதியும்,பரம குருவும் ஏழில் நின்றால் பாலகன் பிறந்த வீடு நாசமாகும்" எனவும்,


              "பாரப்பா இன்னமொரு புதுமைகேளு
                பால்மதியும் பரமகுரு ஏழில் நிற்க
                     சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை

               செந்திருமால் தேவியுமோ விலகியுருப்பாள்"

       என புலிப்பாணி சித்தர் அருளிய பாடல்களின் சான்றுப்படியும் "குரு பகவானும்,சந்திரபகவானும் "ஏழில் இருபபின் அந்த வீட்டிற்கே ஆகாது.இதேபோல் குருவும் சந்திரனும் இணைந்த வீட்டின் அதிபதி பலமிழந்திருந்தாலும் மற்றும் அவற்றுடன் பாவிகள் சேர்ந்திருப்பினும் இந்த யோகம் வேலை செய்யாது.எனவே குருவும்
சந்திரனும் சேர்ந்தாருந்தாலே உடனே ஜோதிடர்களாகிய நாம் குருசந்திர யோகம் என அள்ளி விட கூடாது இது போன்ற ஜோதிட சூட்சும விஷயங்களை ஆய்ந்தே நாம் பலனுரைக்க வேண்டும்.


                                                                       

            "தேவ குருவான பிரகஸ்பதியும் (குரு), அசுர குருவான சுக்கிராச்சாரியரும் ஒருவருக்கொருவர் பகைவர்கள்.எனவே இவர்களின் இணைவு பெற்ற திசைகள் நன்மை செய்வதில்லை.

                சனி பகவானும்,செவ்வாய் பகவானும் இணைந்து பார்க்கும் ஸ்தானங்களை பாதிக்கிறது.குறிப்பாக லக்கனத்தில் இணைந்திருக்கும் போது தன்னுடைய குணத்தை கெடுப்பதோடு இருவரும் இணைந்தே சம சப்தமாக ஏழாமிடத்தை பார்ப்பதால் மனைவி ஸ்தானத்தையும் பாதித்துவிடுகிறது.

                 மேலும் லக்கனத்திற்கு எட்டில் இருந்து குடும்ப ஸ்தானத்தை பார்க்கும் தனம் ,வாக்கு ,படிப்பு மற்றும் குடும்ப ஸ்தானத்தை பாதிக்கிறது.
இதேபோல் இவை இரண்டும் இணைந்து பார்க்கும் ஸ்தானங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது.இதுபோன்ற அமைப்பை பெற்றவர்கள் சனி திசை செவ்வாய் புத்தியிலோ அல்லது செவ்வாய் திசை சனி புத்தியிலோ எச்சரிக்கையாக இருத்தல் அவசியம்.

                  "இதேபோல சந்திர பகவானோடு சுக்கிரன் இணைந்து பத்து பாகைக்குள்ளாகவோ அல்லது சந்திரனும்,சுக்கிரனும் 180 பாகை வித்தியாசத்தில் ஏழாமிடம் அல்லது நான்காமிட தொடர்பு ஆண்/பெண் யாராக இருந்தாலும் காம உணர்வு மிகுந்து வேலி தாண்டிய வெள்ளாடு போலவும்,பல மலரை நாடி சுவைக்கும் வண்டு போல" ஆகுவார்.
"சந்திரனுடன் ராகு பகவான் சேரும்போது மனக்குழப்பங்களும்,திருமண தடையையும் தரும்.தாய் ஸ்தானம் பாதிப்பு உண்டாகும்.

சந்திரனுடன் கேது பகவான் சேரும்போது ஆன்மீக நாட்டம் மிக்கவராகவும்,ஞானமுடையவராக்கும்.திருமண தடையை உண்டாக்கும்.தாய் ஸ்தானம்  பாதிக்கப்படும்
சந்திரனுடன் சனி சேரும்போது திருமண தடை ,மனக்குழப்பம் உண்டாகும்.

                                                                     


சந்திரனுடன் செவ்வாய் பகவான் சேர்திருக்கும்போது "சசிமங்கள யோகம்" எனும் யோகத்தை வாரி வழங்கி மனைவியால் யோகத்தை வாரி வழங்குகிறது.

சுக்கிர பகவானோடு செவ்வாய் பகவான் சேரும்போது "பிருகு மங்கள யோகத்தை " அள்ளித்தருகிறது.காதல் திருமணத்தை கொடுக்கும்.
சுக்கிர பகவானோடு ராகு /கேது இணைவுபெறும்போது சுக்கிரன் களஸ்திரகாரகனாதலால் திருமண தடையை உண்டாக்கும்.மேலும் வாகன காரகனாதலால் வாகனயோகம் பாதிக்கப்படும்.

குரு பகவானோடு ராகு பகவான் இணையும்போது "குரு சண்டாள யோகத்தை "தந்து ஆன்மீக நாட்டமின்றி இருப்பர்.புத்திரபாக்கிய தடையை உண்டாக்குவார்.

குரு பகவானோடு கேது சேரும்போது  தரும் பலனை பின்வரும் பாடலை கவனியுங்கள்

"வல்லரவு தனித்திருந்து மறையவனோடு இசைஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவன் என இயம்புவதற்கு ஏதுவாய் இருப்பான் போலும் "
 
                      என பாடப்படுவதன் மூலம் குருவோடு கேது இணையும்போது ஏழாமிடத்தில் ராகு இருக்கும் (தனித்திருக்க வேண்டும்) போது ஆன்மீக நாட்டம் மிக்கவனாகவும்,தனம் மிக்கவனாக இருப்பான்.புத்திர தடையும் ஏற்படும்.

                    "குரு பகவானோடு சனி பகவான் இணையும் போது ஆன்மீக சான்றோர்களாக்கி விடும்".

                    "குரு பகவானோடு செவ்வாய் இணைவுபெறும் போது "குருமங்கள யோகத்தை" வாரி வழங்குவார்.இதன் பலன் நல்ல மனைவியும் ,மனைவியால் யோகமும் உண்டாகும்.

                  "சூரியனோடு புதன் பகவான் இணைவு புத ஆதித்ய யோகம் எனும் சரஸ்வதி யோகத்தை வழங்கி பல பட்டங்களை பெறக்கூடிய கல்வி புலமையை தந்துவிடுகிறது ".

                                                                       


                   மேலும்
                "விளையும் புதனும் சூரியனும் விரும்பி எட்டு நான்கு ஒன்றில்                          வளையக்கூடின் மன்னவனாம்"

                        ஆம் புதனும் சூரியனும் இணைந்து எட்டு ,நான்கு மற்றும் ஒன்றில் இருந்தால் அந்த காலத்திற்கு மன்னன் ஆனால் காலத்திற்கு ஏற்றார்போல தற்பொழுது அரசு அதிகாரியாகலாம்.
இந்த யோகத்தை சிறப்பாக பெற வேண்டுமெனில் இரண்டில் ஒன்று ஆட்சி உச்சம் போன்ற அமைப்பை பெறவேண்டும்.

                    சில நேரங்களில் சூரியனோடு இணைந்த புதன் உச்ச வக்கிரம்,பாவிஇணைவு,பாதகஸ்தானம் மற்றும் நீசம் போன்ற அமைப்பை பெற்றால் மேற்கண்ட யோகம் வேலை செய்யாது.
பாவியோடு சேராத புதன் யோகராக உள்ளார்.புதன் வலிமை பெற்று சுபரோடு சேரும்போது ஜாதகரை கணிதம்,ஜோதிடம் போன்ற துறைகளில் மிளிர வைப்பார்.

                          புதனோடு சந்திர பகவான் சேரும்போது கதை ,கவிதை ,கட்டுரை எழுததூண்டி சிறந்த எழுத்தாளராக்குவார்.வேடிக்கையாக பேசுவதில் வல்லவராகி பேச்சாளராக்கும்.இசை நாட்டம் உண்டாக்கும்.
அதேநேரத்தில் புதன் பகவானோடு பாவிகளான ராகு,கேது ,சனி போன்ற பாவிகள் சேர்க்கை பெறும்போது பாவராகி புதனுக்குரிய காரகத்தை எதிர்மறையாக செய்ய வைக்கும்.

                      சூரியனோடு பாவிகளான ராகு,கேது  பகவான் சேரும்போது தகப்பனால் எவ்வித பலனும் கிடைப்பதில்லை.அரசாங்க யோகம் குறைவு ஏற்படலாம்.சம்பாதிக்கும் திறமை குறையும்.இங்கு சூரியன் என்பவர் அரசு கிரகமாகவும் ,தந்தைக்கு காரகரும் ஆவார்.

                       மேலும் "சூரியன் என்பவர் தந்தை அவரது மைந்தன் சனி பகவானும் இணைந்திருந்தால் தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவுநிலை சரியாக அமையாது.

                    சனியும் ,செவ்வாயும் இணைந்து நான்காமிடத்தில் இருந்தால் ஒருவரின் குணத்தை கெடுத்து காம எண்ணத்தை தூண்டும்.ஏழாமிடத்தில் இருந்தால் தாமத திருமணம் உண்டாகும்.
எனவே ஒரு மனிதன் நல்லவரோடு பழகும்போது நல்லவனாகவும்,தீயவர்களோடு சேரும்போது தான் தீயவனாகி தீமை செய்வதுபோல கிரகங்களும் சுபரோடு சேர்ந்தால் நன்மையையும்,பாவியோடு சேரும்போது தீமையை தருகிறது என இதுவரை பார்த்தோம்.இவை அனைத்தும் கடந்த பல ஆண்டு ஆராய்சி செய்து பல ஜாதகங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்த பின்னரே மற்றவர்களும் பயன்பெறட்டும் என நோக்கோடு இங்கு பகிர்ந்துள்ளேன்.

              (  "இதேபோல தங்களது சாதகங்களில் உள்ள கிரக சேர்க்கைகள் பற்றியும் அதனால் பலன் உண்டா ? என தெரிந்து கொள்ள விரும்பினால் கீழ்கண்ட எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாகவோ அல்லது செல் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.கட்டணம் உண்டு.சிலர் போன் வழியாக ஒரு சில கிரகங்களை கூறி பலன் கேட்கின்றனர் இது தவறு தங்களது முழு ஜாதகம் பார்க்காமல் கூறும் பலன் தவறாக அமைந்துவிடும் எனவே இதுபோல் கேட்பவர்களை தவிர்த்துவிடுவதற்கு மன்னிக்கவும்.)
                                                   


அன்புடன்
சோதிடர் சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd
PG Assistant chemistry (Teacher)
Astrology Researcher
ஓம் சக்தி ஜோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு
செல் : 97 151 89 647
My Email
masterastroravi@gmail.com
சோதிடம் தொடர்பான அதிக தகவலு பெற கீழ்காணும் எனது முகநால் பக்கத்தை கிளிக் செய்து இணைந்திடுங்கள்.
My facebook link
m.facebook.com/ravichandran3538039