Saturday, 14 November 2015

( 8 ) சினிமா துறையில் ஜொலிக்க..கிரக அமைப்புகள்

                           

சினிமா துறையில் ஜொலிக்க - கிரக அமைப்புகள்.  



                                                        
ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை !

                 "சினிமாத்துறை என்பது ஒரு கனவுத்தொழிற்சாலை ஆகும்.இதில் நுழைந்து எல்லோராலும் வெற்றி பெற முடியாது.இத்துறையில் வெற்றி பெற ஒருவர் பலவித இன்னல்களை அனுபவித்த பிறகே வெற்றியடைய முடிகிறது.இத்துறையில் வெற்றி பெற வேண்டுமாயின் கலைத்திறமையும் அவற்றின் நுணுக்கங்களும் பெற்றிருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.இத்தகுதியை அடைய  கிரகங்களின் பங்கும் முக்கியமானது.எனவே சினிமா துறையில் பிரபலமாவதற்கு உறுதுணையாக அமைந்த கிரக நிலைகளை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

பாடகராக .....

                                                பாடகராக ஒருவர் பின்னனி பாடி கலைத்துறை மூலம் செல்வமும்,செல்வாக்கும் பெற கீழ்கண்ட கிரகங்களும்,ஸ்தானங்களும் பலம் பெற வேண்டும்.

                                                வாக்கு ஸ்தானம் பலம் பெற வேண்டும்.வித்தைக்கு அதிபதியான புதன் ஆட்சி,உச்சம் பெற்று கேந்திர கோணங்களில் பலம் பெற்றிருக்க வேண்டும்.


                                                     கலைக்காரகன் எனப்படும் சுக்கிரன்  உச்சம்,திரிகோணம்,ஆட்சி  பெற்று ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்திலோ அல்லது  பத்துக்கு பத்தாம் வீடான ஏழாம் இடத்திலோ அமையப்பெற வேண்டும்.
வாக்கு ஸ்தானதிபதி தன் வீட்டிற்கு லாப ஸ்தானத்தில் பலம் பெற வேண்டும்.

                                      இசைக்கு அதிபதியான சுக்கிரனும்,நல்ல மன நிலை தரக்கூடிய சந்திரனும் பாடகராக்கூடிய சாதகத்தில் பலம்பெற்றிருக்கும்.
பாடகரிலும் பலவித ரகம் உண்டு சிலர் பக்திப்பாடல்கள் பாடுபவராக இருப்பர்.அவர்களது ஜாதக கட்டத்தில் வாக்கு ஸ்தானத்தில் அங்காரகனும்,சுக்கிரனும் பலம் பெற்றிருக்க வாய்ப்புண்டு.

                               இதேபோல் ஒரு சிலர் சிற்றின்ப பாடல்களை பாடி புகழ் பெறுவார்கள்.இவர்களது ஜாதகத்தில் சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் நீச சுக்கிரன் இருந்தால் இது போன்ற பாடகராகி புகழ்பெறும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள்.

                                  சிலர் சங்கீத சாஸ்திரங்களில் கரை கண்டவராக உலகம் போற்றும் பாடகராக திகழ்வதற்கு இவர்களுடைய ஜாதகத்தில் ராசி சக்கரத்தின் இரண்டாம் இடத்திலோ அல்லது பஞ்சம ஸ்தானத்திலோ  சூரியனும்,புதனும்  அல்லது குருவும்,சந்திரனும் இணைந்து இருப்பின்  இவ்வாறு புகழ்பெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.

                          ஒரு சிலர் நவீன யுக யுக்தியான கணிப்பொறி உதவியால் புகழ்பெறுவதற்கு கணிப்பொறிக்கு அதிபதியான சனி பகவானை குரு பார்வை பெற்றவர்கள் ஆகும்.



கவிஞராக..

   
                                           சினிமா துறையில் புகழ்பெற்ற கவிஞராக பிரபலயமடைய கலைக்காரகன் சுக்கிரனும்,வித்தை மற்றும் எழுத்துக்காரகர் என போற்றப்படும் புதனும் பலம் பெற்று குரு பகவானின் நற்பார்வைப்பட வேண்டும்.


                                   சந்திர கேந்திரத்தில் சுக்கிரனும்,புதனும் திகழ வேண்டும்.
மேலும் கவிஞராக பாக்கிய -விரய ஸ்தானங்களும்,தர்ம-கர்ம ஸ்தானங்கள் பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகமும் பெற்று இவற்றிற்கு குரு பார்வையும் பெற வேண்டும்.

                           குருவிற்கு இரண்டாமிடத்தில்  அதன் அதிபதி மற்றும் சந்திரனிருக்க  ,புதன் ஒன்பதாமாதிபதியுடன் கூடி புகழ் ஸ்தானமான  மூன்றாமிடத்தில் இருக்க கவிஞராக வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

                          சந்திரனும்,புதனும் சம சப்தம பார்வை வேடிக்கை விநோதமான பல பாடல்களை இயற்றுபவராக திகழ்வார்.

                           சிலர் பக்தி பாடல்கள் எழுதி புகழ் பெற வேண்டுமாயின் பஞ்சம ஸ்தானத்திலோ அல்லது வாக்கு ஸ்தானத்திலோ கேது இருந்து  மேற்கண்ட அமைப்புகளும் பலம் பெற்றிருப்பின் பக்தி பாடல்கள் பல எழுதி புகழ்பெறுவார்கள்.

                                   மேலும் லாப ஸ்தானத்தில் சந்திரனும்,பஞ்சம இசை ஸ்தானமாகிய ஐந்தில் குரு இருப்பதும்,
லக்கனத்தில் சுக்கிரன் மற்றும் வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பவருக்கு கவிதை ஞானம் மிகுந்து பக்தி பரவச பாடல்களை இயற்றுவர்.

                                  வாக்கு மற்றும் பஞ்சம ஸ்தானங்களில் சுக்கிரன் தொடர்பு மற்றும் காம காரகாரகர் செவ்வாய் சேர்க்கை,பார்வை மற்றும் சாரம் இவற்றில் ஒன்றை பெற்றவர் சிற்றின்ப பாடல்கள் எழுதி புகழ்பெறுபவராக திகழ வாய்ப்புண்டு.

இசையமைப்பாளராக திகழ...

                         ஒருவர் ஜாதகத்தில் சூரியன்,சந்திரன்,புதன்,சனி மற்றும் கலைக்காரகராகிய சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலமடைந்தவர்கள் இசையமைப்பாளராக திகழ்வார்கள்.உச்சம் பெற்ற சனியை குரு பார்த்தால் கணிப்பொறி உதவியால் பிரபல இசையமைப்பளராக மாறும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.


நடனம்

                                   நடனத்தில் புகழ்பெற்ற நாட்டிய தாரகையாக/தாரகனாக திகழ நடனத்திற்குரிய சுக்கிரனும்,சனியும் பலம் பெற்றிருக்கவேண்டும்.
நான்கு மற்றும் ஏழாமிட பரிவர்தனை பெற்றிருக்கவேண்டும்.இவற்றோடு குரு மற்றும் கேது நான்கு மற்றும் ஏழாமிட தொடர்பு உடையவர்கள் பரத நாட்டியம் முதலான பக்தி பாடல்களுக்கும்.,

                       செவ்வாய்,சுக்கிரன் நான்கு மற்றும் ஏழாமிட தொடர்பும் இவற்றுடன் பத்தாம் அதிபதியும் சேர கவர்ச்சி நடன மங்கையாவள்.

இயக்குனராக......

                              சூரியன்,புதன்,சுக்கிரன் ஒன்று சேர்ந்து லக்கனத்திற்கோ அல்லது ராசிக்கோ கேந்திரங்களிலோ அல்லது கோணங்களிலோ அமைந்தாலும்,
பாக்கியாதிபதி பலம் பெற்று தர்ம-கர்மாதிபதி யோகம் பெற்று குரு பார்வை பெற கலை உலகம் உள்ளவரை பிரபலமான இயக்குனராக வாய்ப்புகள் உண்டு.

                                    இதில் புதன் அதிக பலம் பெறும்போது கலைப்படங்களை இயக்கும் வாய்ப்பும்,
சுக்கிரன் அதிக பலம் பெறின் கமர்ஷியல் படமும்,
சூரியன் உச்சம் பெற்று குரு பார்வை பெறின் பக்தி படங்களும் எடுக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.

நடிகராக ....

                                      கலைக்குறிய சுக்கிரன் பலம் பெற்று ஜீவன ஸ்தான தொடர்பும்,இதேபோல் சனியும் பலம் பெற வேண்டும்
சுக்கிரன்-சந்திரன் பரிவர்தனை  பிற மொழி படங்களில் நடிக்க வாய்ப்பும்,
பத்தாம் இடத்தோடு சுக்கிரன் தொடர்பு பெற்று ஆட்சி ,உச்சம் பெறும் ஜாதகர் இதனுடன் லாபாதிபதி சேர்ந்து சந்திரனும் பலம் பெற்றிருக்க வேண்டும்.

பட தயாரிப்பளராக...

                          கலைக்காரகன் சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்று இவை இரண்டு,பதினொன்றுக்குடையவனாகி
இவற்றுடன்  ஜீவனக்காரகர் சேர சினிமா தயாரிப்பளராக இருப்பர்.


நன்றி!

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     வாட்ஸ் அப்
       9715189647

           செல்
     9715189647
       7402570899

                                 

அன்புடன்

சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்

ஓம் சக்தி ஆன்லைன் ஜோதிட ஆலோசனை மையம்,        கரம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம்.


என்னைப்பற்றி ....ஓர் அறிமுகம்

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

இந்த பிளக்ஸ்பாட்டை உருவாக்கிய எனது பெயர் ரவிச்சந்திரன் எனது முழுவிபரம் பின்வருமாறு.

சோதிடர்ரவிச்சந்திரன்
M.SC ,MA,BEd,
சோதிட ஆராய்சியாளர்,
வாழ்வியல் ஆலோசகர்,
முதுநிலை வேதியியல் ஆசிரியர்
ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் ரிசர்ச் சென்டர்,
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்,தமிழ்நாடு.

தொடர்புக்கு
செல் , 97 151 89 647
செல்: 740 257 08 99

My whats up no
97 151 89 647
Online Astro consult conduct my cell or Whats up or Email or Facebook messenger.Fees is applicapable.

My Email.Id ; masterastroravi@gmail.com

My website.visit hear

AstroRavichandransevvai.blogspot.com

My facebook link. Please click hear

m.facebook.com/ ravichandran3538039

My facebook group .click hear

சோதிடர்ரவிச்சந்திரனின் சோதிடபாமாலை

My facebook page

முகநூலில் உள்ள பக்கம் பகுதியில் எனது பக்கங்கள்.இதனை முகநூலில் பக்கம் பகுதியில் கீழ்கண்ட எனது முகநூல் பக்கத்தினை தேடி இணைந்திடுங்கள்.

முதலில் சோதிட பக்க பதிவுகள்

1) சோதிடர்ரவிச்சந்திரன்
2)ஜோதிட குறுந்தகவல்கள்
3)ஜோதிட கவியரங்கம்

சோதிடம் அல்லாத பக்கங்கள்

1) கவிதை நான் சொல்லவா
2)வாழ்வியல் சிந்தனைகள்
3)சோதிடர்ரவிச்சந்திரனின் "கேள்வியும் நானே பதிலும் நானே "

தங்களது ஜாதகத்தில் உள்ள கிரக நிலை நன்கு ஆராய்ந்து பலன் பெற விரும்புவோர்கள் செல்லில் தொடர்பு கொள்ளவும்.நேரில் வந்து சாதகம் பார்க்க இயலாதவர்கள் தங்களது சாதக விபரங்களை மேற்கண்ட செல் எண்ணில் உள்ள வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது மெஸேன்சர் மூலமாகவோ அல்லது இமெயில் மூலமாக சாதகத்தினை அனுப்பி பலன் பெறலாம்.கட்டணம் உண்டு.விருப்பமுடையோர் தொடர்பு கொள்க.

My bank Account detail

P.Ravichandran
Bank ;  I. O.B
Branch : Regunathapuram
Account no ; 105201000004608
IFS CODE : IOBA0001052
MICR NO : 622020016

Thursday, 5 November 2015

( 7 ) உங்களுடைய ஜாதகப்படி எந்த துறையை நீங்கள் தேர்வு செய்யலாம் ?

                            

உங்களுடைய ஜாதகப்படி எந்த துறையை நீங்கள் தேர்வு செய்யலாம் ?

                                            



ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை !

            அன்பிற்குரிய பெற்றோர்களே 
      தங்களது  குழந்தைகளுக்கு என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என குழம்பிக்கொள்ளும் பெற்றோர்களுக்கு இந்த கட்டுரையை தொடர்ந்து படிப்பதன் மூலம் ஒரளவு  புரிந்து கொள்ளும் வகையில் இப்பதிவு பதியப்படுகிறது.

மருத்துவராகும் யோகம் உண்டா என தெரிந்து கொள்ள :-


       தங்களது குழந்தைகள் மருத்துவராகும்  யோகம் உள்ளதா என தெரிந்து கொள்ள கீழ்கண்ட அமைப்பை  உங்களது குழந்தைகளின் ஜாதகத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

            1)  உயிர் லக்கனத்திற்கு பத்தாம் இடத்தில் செவ்வாய்  பலம் பெற்று வாசம் செய்யவேண்டும் .


            2) பத்தாம் அதிபதியாக செவ்வாய்  வந்து ஆட்சி,உச்சம்,கேந்திர மற்றும் கோணம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் அக்கிரகம் சுபர் பார்வை,சேர்க்கை மற்றும் சாரம் பெற்றிருக்க வேண்டும்.

            3) பத்தாம் இடத்தை செவ்வாய் பார்வையிட வேண்டும்.அல்லது பத்தாம் இடத்ததிபதியும்,செவ்வாயும் சேர்ந்தோ,பார்வை பெற்றோ  மற்றும் பரிவர்தனையோ பெற்று சுப ஸ்தானத்தில் தங்க வேண்டும்.இத்தகைய நிலையில் செவ்வாய் நீசமடையாது இருக்க வேண்டும்.அனைத்திற்கும் மேலாக செவ்வாயும் ,பத்தாம் இடத்ததிபதியும் தீயோர் தொடர்பற்று இருக்க வேண்டும்.இதுனுடன் சூரியன் ஆட்சி,உச்சம் பெற்று சுப ஸ்தானத்தில் பலம் பெற்றிருக்க வேண்டும்.

           லக்கனத்திற்கு பத்தாமிடத்தை வைத்து  மருத்துவராகும் யோகத்தை பார்ப்பதுபோல ராசிக்கு பத்தாம் இடத்தையும் பார்த்து பலனுரைக்க வேண்டும்.

          இதேபோல் சூரியன்,சனி மற்றும் ராகுவும் மருத்துவ கிரகங்கள்.இவர்கள் இரண்டாம் பாவத்திற்கோ அல்லது இரண்டாம் அதிபதிக்கோ தொடர்பு ஏற்பட்டாலும் மருத்துவராகும் யோகம் ஏற்படும்.

விஞ்ஞானியாகும் யோகம்

சூரியனும்,எட்டாம் அதிபதியும் விஞ்ஞான அறிவாற்றலை தரும் கிரகமும் மற்றும் பாவமும் ஆகும்.இவர்கள் இருவரும் பலம் பெற்று இரண்டு,பத்தாம் இடத்திற்கு தொடர்பு ஏற்பட்டால் ஆராய்சி துறையில் படித்து முனைவர் பட்டம் பெறும் யோகமாகும்.மேலும் புகழ்பெற்ற விஞ்ஞானியாவார்.

எட்டாம் பாவகம் ஆராய்சி துறையையும்,புதிய கண்டுபிடிப்பையும் குறிப்பதாகும்.

சூரியன்,குரு,செவ்வாய் இணைந்து இரண்டு,பத்தாம் பாவத்தோடு தொடர்பு கொள்வது  விஞ்ஞானியாகும் யோகம்.இவற்றோடு புதனும் பலம் பெற்றால் மேலும் பல புகழைத்தரும்.

நீதிபதியாகும் அமைப்பு

     பத்தாம் பாவகம்  குரு,சனியால் பார்க்கப்படுவது.
    லக்கனாதிபதி ஆறில் பலம் பெற்று பத்தாம் பாவம் மற்றும் அதன் அதிபதியுடன் தொடர்பு ஙொள்வது.



     பத்தாம்  அதிபதி புதனாகி இரண்டாம் பாவத்தில் சனியுடன் இருந்து  குருவுடன் தொடர்பு கொள்வது.


       குரு பகவான் ஆறாம் பாவத்தில் பத்தாம் அதிபதியின் சாரம் வாங்கி நிற்பது.


பொறியியலராகும் YOGAM

     பத்தாம் அதிபதி சூரியன்,புதன்,சுக்கிரன் மற்றும் சனி இவர்களில் ஒன்றாக இருந்து  ஆட்சி,உச்சம் மற்றும் சுப சாரம் மற்றும் பார்வை பெற்றிருப்பின் பொறியாளர்.

பத்தாம் அதிபதி மற்றும் அதனோடு தொடர்புடைய கிரகங்களை பொறுத்தோ அவனது துறை அமைகிறது.

கீழ்கண்டவற்றுள் துறைகளும்,அத்துறைக்கு செல்வதற்கு ஆதரவாக அமர்ந்த கிரகங்களாகும்.


1)  கப்பல் துறை ; - சுக்கிரன்,சனி



2) காவல் துறை:- செவ்வாய்,புதன்,
                                     சனி




3) விமான துறை:-ராகு ,சனி



4) ரயில்வே துறை:-சனி,சந்திரன்



5) வேதத்துறை:-குரு,புதன்



6)விவசாய துறை:-செவ்வாய்,
                                    சூரியன்,சந்திரன்




7) மருத்துவதுறை;-ராகு,செவ்வாய்
                                      சனி




8) மின்சாரத்துறை:-செவ்வாய்,ராகு



9) சினிமாத்துறை:-சுக்கிரன்,புதன்
                                    சந்திரன்




10) பத்திரிக்கை துறை:-புதன்,சனி



11)வங்கி துறை:-குரு,சுக்கிரன்,புதன்



12)ஜவுளி துறை:-சுக்கிரன்,புதன்



13)ஹோட்டல் துறை:-சுக்கிரன்



14) அரசியல் துறை:-சூரியன்,சனி
                                         செவ்வாய்




15)இராணுவ துறை:-செவ்வாய்,சனி



16)கல்வி துறை :- குரு,புதன்,கேது



17)கணிப்பொறி;-ராகு,செவ்வாய்



18) இசைத்துறை:- குரு,கேது,
                                     சுக்கிரன்




19) விளையாட்டு துறை:-சூரியன்
                                                   செவ்
20)பல சரக்கு கடை;-
                                        புதன்,சனி




22)கோவில் திருப்பணி:-



             நான்காம் அதிபதியுடன் பத்தாம் அதிபதி கூடினால் கோயில் திருப்பணி

     23) அக்கவுண்ட் தொழில்:-
                    லக்கனம் மற்றும் லக்கனாதிபதியுடன் குரு,புதன் சம்பந்தப்பட்டால் கணக்கெழுதும் வேலை அமையும்.

24) கமிஷன் ஏஜண்ட்;-
                1,4-ஆம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டு நான்காம் பாவத்திற்கு  புதன்-சனி சம்பந்தம் ஏற்படுவது.


  24) பால் பண்ணை வியபாரம் :-
                நீர் ராசிக்கிரகம் சந்திரன்,சுக்கிரன்.இதேபோல் சாதக கட்டத்தில் ஏழாம் பாவம் பால்,தயிர் இவற்றை குறிக்கும்.எனவே மேற்கண்ட இரு கிரகங்களும்(சந்திரன்,சுக்கிரன்) ஏழாம் பாவத்திற்கு தொடர்புகொண்டு பலம் பெறுவது பால் பண்ணை வியபாரத்தை ஏற்படுத்தி தரும்.


25) விவசாயி
           விவசாய  கிரகமான  சனி,சந்திரன் மற்றும் செவ்வாய் நான்காம் பாவத்திற்கு சம்பந்தம் ஏற்பட்டு பலமடைந்தால் சிறந்த விவசாயி.
            இதேபோல சனி 1,3 -ம் பாவ தொடர்பு கொண்டாலும் விவசாய பண்ணை அமையும்.


26)வீடு கட்டி வாடகைக்கு விடுதல்:-
             பொதுவாக செவ்வாய் பலமடைந்தால் நிலபுலம் அதிகமாக சேர வாய்ப்புள்ளது.செவ்வாய் பூமிகாரகன்.எனவே செவ்வாய் நீர் கிரகமான சந்திரன்,சுக்கிரன் சாரம் பெற்றால் விவசாய நிலங்கள் வாங்கும் யோகம் அதிகம் உண்டு
,ஆனால்.செவ்வாயானது 4,7 ஆம் அதிபதி சாரம் பெற்று பலம் பெற்று  நான்கு,ஏழாம் அதிபதிகள் தொடர்பு பெற்று  அதனுடன் எத்தனை கிரகம் தொடர்பு ஏற்படுகிறது  அதற்கேற்றார்போல் அவன் இடம் வாங்கி  அத்தனை வீடுகள் கட்டி வாடகைக்கு வீடுவான்.

  27)தங்கநகை வியபாரம்:-
            தங்கத்தை குறிக்கும் கிரகம் சூரியன்,சுக்கிரன் ஆகும்.
              இவை லக்கனம் மற்றும் பத்தாம் அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டால் தங்கநகை வியபாரம்(ஜீவல்லரி)  செய்யலாம்.இவற்றுடன் செவ்வாய் தொடர்பும் நல்லது.


28) நவதானிய வியபாரம்:-
                  இரண்டாம் பாவம் உணவு வகைகளையும்,நவ தானியத்தையும் குறிக்கும்.
               புதன்-உணவு தானியங்களையும்
               சந்திரன்-உணவு வகைகளையும்
               சனி-பருப்பு வகை நவ தானியங்களையும் குறிக்கும்.


மேற்கண்ட கிரகங்கள் லக்கன மற்றும் பத்தாம் பாவத்துடன் தொடர்பு ஏற்பட்டால் நவதானிய வியபாரம் மேற்கொள்ளலாம்.

29) சிட்பண்ட்ஸ் ,வட்டிக்கடை,பைனான்ஸ் கம்பெனி முதலாளி:-
      தனகாரகன் குருவானவர் தன,லாப ஸ்தான தொடர்பு ஏற்பட்டால் பைனான்ஸ் கம்பெனி நடத்தலாம்.


    தன,லாப பாவத்தின் திரேக்காணதிபதிகள் நவாம்சத்தில் குரு அல்லது புதன் வீட்டில் இருந்து குரு அல்லது புதன் சம்பந்தப்படுவது.      
     குரு 1,2,11  ஆம் பாவங்களில் ஏதாவதொன்றுக்கு சம்பந்தப்படுவது.


30 )போலிஸ் மற்றும் ராணுவம்:-
        ஒருவருடை சாதகத்தில் பத்தாம் அதிபதி செவ்வாயாக வந்து பலம் பெற்று இருப்பின் போலிஸ்,ராணுவம் போன்ற துறை.இந்த செவ்வாய் வீர தீர காரகமான மூன்றாம் பாவம்,எதிரி ஸ்தானமான ஆறாமிடமா ஆகியவற்றுடன் தொடர்பு அல்லது  பார்வை மற்றும் சேர்க்கை பெற்றிருக்கவேண்டும்.

               




அன்புடன்
சோதிடர் 

சோ.ப. ரவிச்சந்திரன்
M.SC,MA,BEd (Teacher & Astrologer)
ஓம்சக்தி சோதிட நிலையம்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்.தமிழ்நாடு.


வாட்ஸ் அப்
   9715189647

செல் : 9715189647.
செல் : 740 257 08 99


போன் வழியாக நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சாதக பலன் மற்றும் விவாக பொருத்தம் பார்க்கப்படும்.சாதகம் எழுதி போஸ்டலிலும் அனுப்பி வைக்கப்படும்.உங்களுடைய பிறந்ததேதி,நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண் 97 151 89 647 க்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம். )

(Do you want to consult your Horoscope through cell,contact me,charge is applicaple)

Sunday, 1 November 2015

( 6 ) வெளி நாடு செல்லும் யோகம் யாருக்கு ?

                                
               

வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு ?

                              

ஸ்ரீ பத்ரகாளியம்மன் துணை!

                                                 "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.

                                                   மனித வாழ்வுக்கு பொருள் தேடல் என்பது அவசியமான ஒன்றாகும்.சமூகம் பொருளுடையவரையே போற்றி புகழ்கிறது.வான் புகழ் கொண்ட வள்ளுவர் கூட
"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு
அவ்வுலக மில்லை". என்கிறார்.


                                         பொருள் உள்ளவர்களைத்தான் மனித உலகம் மதிக்கிறது.அதே போல் புண்ணியம் செய்து நேர்மையாக வாழும் அருள் உள்ளவர்களைத்தான் தேவ உலகம் மதிக்கிறது என பகர்கிறார்.

                                      எனவே பணம் சம்பாதிக்கும் பொருட்டு அவர்களது ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா ?  அவ்வாறு செல்வதற்கு உகந்த திசை புத்திகள் உள்ளதா ? அல்லது இல்லையா?.
அவ்வாறு வெளிநாடே சென்றாலும் அங்கு நிறைய பொருளீட்டும் யோகம் இருக்கிறதா ?

                                          எந்த மாதிரியான வேலையை தேடி செல்லலாம் ? அங்கு குடியுரிமை பெறும் யோகம் உண்டா?

                                  இது போன்ற பல வினாக்களுக்கு சாதக அடிப்படையில் விடை தேடி அதற்கு பிறகு வெளிநாடு செல்லல் நலம் பயக்கும்.இவ்வாறு எதுவும் பார்க்காமல் வட்டிக்கு பணம் வாங்கி பல லட்சங்களை கட்டி போய் சில வாரங்களிலே "போன மச்சான் திரும்பி வந்தான்?" என்ற கதையாக திரும்ப வந்து அந்த கடனை அடைக்க முடியாமல் அந்த குடும்பம் நொறுங்கிப்போய் ஏன் சில நேரங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறார்கள்.எனவே வெளிநாடு செல்ல விரும்புவோர் பயன்பெறும் வகையில் இப்பதிவு இங்கு பதியப்படுகிறது.

                                                             


                                       சாதகத்தில் உள்ளப ணிரெண்டு ராசிகளை பின்வருமாறு  பிரிக்கிறோம்.

காற்று ராசி : மிதுனம்,துலாம்,கும்பம்


அக்னி ராசி : மேஷம்,சிம்மம்,தனுசு



நிலம் ராசி  : ரிஷபம்,கன்னி,மகரம்



ஜல ராசி  :கடகம்,விருட்சகம்,மீனம்

                                 வெளிநாடு விரும்புவோர்களுக்கு லக்கினம்,லக்கினாதிபதி,சந்திரா லக்கனம் இவைகள் ஜல அல்லது காற்று ராசிகளில் அமைய வேண்டும்.
2,11.12  ஆகிய சாதக கட்டங்கள் ஒருவருக்கு காற்று அல்லது ஜல ராசியாக அமைய வேண்டும்.

                              11- ம் வீட்டு அதிபதி ,12 -ஆம் வீட்டு அதிபதி காற்று அல்லது ஐல ராசியாக இருந்து இவை ஆட்சி,உச்சம்,கேந்திரம் ,திரிகோணம்,லாபஸ்தானம் பெற்று இருக்க வேண்டும்.இவை அம்சத்திலும் இதே போன்ற அமைப்பை அடைந்திருக்க வேண்டும்.

                                         11 மற்றும் 12 -ஆம் வீட்டு அதிபதிகள் காற்று அல்லது ஜல ராசிக்குரிய நட்சத்திர சாரம் பெற்றிருக்க வேண்டும்.

                                  காற்று அல்லது ஜென்ம ராசி ஜென்ம லக்கனத்திற்கு சுப ராசிகளாக இருக்கவேண்டும்.

                                                   


வெளிநாடு செல்வதை ஆதரிக்கும் கிரகங்கள்

   சூரியன்,சந்திரன்,குரு,செவ்வாய்,புதன்,சுக்கிரன்,சனி,ராகு

சுவாதி,பூராடம்,அஸ்வினி ,சித்திரை நட்சத்திர காலில் சனி நின்றால் ஜாதகர் அந்நிய தேசம் செல்லலாம்.

வியாபாரம் மூலம் வெளிநாடு செல்ல :-

               புதன் கீழ்கண்ட நட்சத்திர காலில் நின்றால்
மகம்,மற்றும்  சனி  சாரத்தில் நின்றால் ஜாதகர் கிராம வாசம் புரிவார்.மாறாக
பூரட்டாதி,ஆயில்யம்  மற்றும் ராகு நட்சத்திர காலில் நிற்பின் பல தேசம் செல்வார்.


ஆயில்யம், கேட்டை,ரேவதி நட்சத்திரகாலில் நின்றால் வியபாரம் மூலம் வெளிநாடு செல்லலாம்.




தந்தை வெளிநாடு செல்லும் யோகம்;-

                            சூரியனுடனுடைய நட்சத்திர சாரத்தில் சனி நின்றால் அவனது அந்நிய தேசம் சென்றிருப்பார்.தந்தை மகன் ஓர் இடத்தில் இருக்க முடியாத நிலை.
பிதுர்காரனாகிய சூரியனுடன் சந்திரன்,சுக்கிரன்,புதன் இவர்கள் கூடி நின்றால் அவனது தந்தை வெளிநாடு செல்லும் பாக்கியம் பெற்றிருப்பார்.
ஒருவரது சாதகத்தில் 10,6 ராசியில் ஏழு கிரகஙாகள் கூடியிருந்தாலும்,12- ஆம் ராசிநாதன் சர ராசியில் இருந்தாலும்,
அச்சாதகர் பொருள் ஈட்டும் விஷயமாக வெளிநாடு சென்றிருப்பார்.


                      4, 10 ஐ லக்கினமாகவும்,பணிரெண்டாம் ராசியில் ராகு அல்லது சுக்கிரன்,சந்திரன் இவர்கள் இருவரும் 10 ,12 ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருப்பினும் வெளிநாட்டு யோகம்.

                           பத்தாம்  வீட்டாம் அதிபதி ராகு,கேதுக்களின் வர்க்கம் பெற்று அல்லது சனி,குரு இவர்களின் வர்க்கம் பெற்று இருப்பினும் அதாவது சில நேரங்களில் நீசம்,அஸ்தமம் பெற்று இருந்தால் அந்த சாதகர் சுய தொழிலை விட்டு அந்நிய தேசங்களில் சேவக விருத்தி செய்வான்.
ராசிக்கு பத்தில் சனி,குஸன்,சுக்கிரன் இவர்களிருந்தால் அந்நிய தேசம் சென்று பற்பல வியபாரம் செய்வான்.

                              மகர லக்கினம் சர ராசியாக இருந்து சனி,சந்திரன்,குரு சம்பந்தம் பெற்றோ அல்லது பார்வை பெற்றோ இருந்தால் கடல் கடந்து அயல்நாடு செல்லாம்.

                                                               


பல முறை அயல்நாடு செல்லும் யோகம்

                                                            ஒருவரது சாதகத்தில் ஜல கிரகங்களான சனி,சந்திரன்,குரு ஆகிய மூன்று கிரகங்களும் கடகம்,மகரம்,மீனம் ஆகிய ராசிகளில் ஒன்றில் இருப்பின் இவ்வகை யோகம் உண்டு.

                                                   லக்கினம் சரமாகவும்,லக்கினாதிபதி வேறு சர ராசியில் இருப்பின் வெளிநாட்டு யோகம்.

                                              குரு,சனி,பாம்பு சரம் உபயம் அமர்ந்திருப்பின் கடல் கடக்கும் யோகம்.
                                           12-ம் வீட்டோன், 8-ஆம்  வீட்டோன் மற்றும் செவ்வாய் இம்மூவர் சேர்ந்து எவ்விடத்திலிருந்தாலும் பர தேசம் செல்வான்.

                                       ஒரே வீட்டில் சூரியன்,சந்திரன்,புதன்,சுக்கிரன் சேர்ந்து நிற்பது
.குரு 4,6,12  ம் வீட்டில் இருப்பது.


                                              ராகு அல்லது கேது ஜீவ ராசியான கடகம்,மகரம்,மீனம் ஆகிய ஒன்றுடன்  இருப்பது.

                                                   செவ்வாய்,சுக்கிரன்,சந்திரன் அல்லது ராகு சர ராசியாக இருப்பது.
                                        பத்தாம் அதிபதி ராகு,கேது நட்சத்திர காலிலோ அல்லது ஜல ராசியின் நட்சத்திர காலில் நிற்பது.

                           கடகம்,மகரம்,மீனம் போன்ற ராசிகளில் சனி,குரு,சந்திரன் அல்லது பத்தாம் வீட்டதிபதி வெளிநாடு செல்லும் யோகம்.

பத்தாம் வீட்டதிபதி ராகு,கேது நட்சத்திர காலில் நிற்பது.
மேஷம்,கடகம்,துலாம்,மகரம் போன்ற சர ராசிகளில் நான்கு பக்கங்களில் கிரகங்கள் அமர்ந்து ஒருவரையோருவர் பார்த்துக்கொள்ளல் யோகம்.

இதுவரை பொதுவான விதிகளை பார்த்தோம் .இனி பணிரெண்டு ராசிகளுக்கு அதிக வெளிநாட்டு யோகம் தரும் கிரகநிலைகளை பார்ப்போம்.

  சுருக்கமாகச் சொன்னால் ஒரு ஜாதகத்தில் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்கள் சுபத்துவம் ஆகி இயற்கை சுப கிரகங்களால் பார்க்கப்பட அதன் தசை காலங்களில் கட்டாயம் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்

   ஒரு ஜாதகத்தில் வெளிநாடு செல்லும் யோகத்தினை அதிகமாகத் தருவதில் நவக்கிரகங்களில் கரும்பாம்பு என்று அழைக்கப்படும் ராகு பகவானுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.

ஒருவரது  ஜாதகத்தில்  நட்பு நிலையில் சுபத்துவமான அமைப்பை பெற்று ராகு பகவான் எட்டு மற்றும் பன்னிரண்டாம் இடங்களில் இடம் பெற்று அதன் தசை நடக்கும் காலங்களில் சாதகரை வெளிதேசங்களுக்கு செல்ல வைப்பார்.

முதலில்

மேஷ லக்கனத்திற்கு


            பத்தாம் வீட்டு அதிபதி சனி தன் சொந்த வீடான மகரத்தில் அமர்ந்து பணிரெண்டாம் வீட்டதிபதி குரு கடகத்தில் உச்ச வீட்டிலிருந்து சம சப்தமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் நிலை பிரபலமான வெளிநாட்டு யோகம்.இந்த அமைப்புடையவர்கள் அதிக பொருளீட்டும் யோகத்தை பெற்றவர்கள்.சனி பாதகாதியாகவும் வருவதால் ஒரு சில பாதகங்களை செய்ய நினைத்தாலும் லக்கன யோகரான குரு பார்வை பாதகத்தை குறைத்துவிட வாய்ப்புண்டு.


ரிஷப லக்கனத்திற்கு 


         பணிரெண்டாம் வீட்டிற்குரிய செவ்வாய் ஓன்பதாம் வீடான மகரத்தில் உச்சம் பெற்று லாப, அட்டமாதிபதியான குருவால் பார்க்கப்பட்டால் வெளிநாடு செல்லும் யோகம்.


மிதுன லக்கன காரருக்கு

              5,12 க்குரிய சுக்கிரன் பத்தில் ஜல ராசியான மீன ராசியில் உச்சம் பெறுவது வெளிநாட்டுயோகம்.

கடக லக்கனகாரர்களுக்கு 


            4,11  க்குரிய சுக்கிரன் பதினொன்றில் ஆட்சி பெறுவதும் புதன் பணிரெண்டில் ஆட்சி பெறுவதும்,
இதேபோல் 9- ஆம் வீட்டதிபதி குரு 12 -ல் மிதுனத்தில்  அமர்வதும்,பணிரெண்டாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீடான  ஜல ராசி மீனத்தில் இருப்பதும் யோகம்.

( குறிப்பு ; 9,12 க்குடையவர்கள் பரிவர்தனை, பார்வை மற்றும் சேர்க்கை எல்லா லக்கன காரர்களுக்கும் வெளிநாட்டு யோகம்)
சிம்ம லக்கனகாரர்களுக்கு பணிரெண்டாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடமான ரிஷபத்தில் பெற்று, 5, 8 க்குரிய குரு ஜல ராசி கடகத்தில் உச்சம் பெறுவதும் வெளிநாட்டு யோகம்.

கன்னி லக்கனத்திற்கு 


          4,7  க்குரிய குரு பதினொன்றாம் இடமான ஜல மற்றும் சர ராசியான கடகத்தில் உச்சம் பெறுவது யோகம்.குரு பாதகாதிபதியாகவும் வருவதால் குருவை வழிபட்டாலோ அல்லது வருமானத்தின் ஒரு பகுதியை தான தர்மங்களோ அவை செய்யும் பாதகங்களிலிருந்து விடுபடலாம்.


துலாம் லக்கனத்தாருக்கு


          பணிரெண்டாம் அதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்று குருவால் பார்கப்படாமல் இருத்தல் நலம்.


விருட்சக அன்பர்களுக்கு


         7,12 க்குரிய சுக்கிரன் பணிரெண்டில் ஆட்சியோ அல்லது ஐந்தில் உச்சமோ பெறல் நலம் அல்லது பணிரெண்டில் 4,5 -க்குடைய சனி உச்சம் பெறுவதும் பிரபல யோகம்.


தனுசு லக்கனத்திற்கு 

          5,12 க்குரிய செவ்வாய் உச்சம் பெற்று லக்கன மற்றும் நான்காம் ஆதிபத்திய குரு உச்சம் பெற்று ஜல சர ராசியான கடகத்திலிருந்து பார்த்தல் நலம்.


மகர லக்கனத்திற்கு 


        3,12 க்குரிய குரு ஏழில் உச்சம் பெற்று லக்கனத்தில் சனியையோ அல்லது  லக்கனத்தில் உள்ள 4,11- க்குரிய செவ்வாயை பார்த்தால் கடல் கடந்து செல்லும் யோகம்.


கும்ப லக்கனத்திற்கு 


             2,11 க்குரிய குரு பதினொன்றில் ஆட்சிபெற்று பணிரெண்டில் சனி இருப்பின்.யோகம்.


மீன லக்கனத்தாருக்கு

         11,12 க்குடைய சனி ஜந்தில் அமர்ந்து ஆட்சி பெற்ற குருவால் பார்க்கப்படுவது அல்லது  லக்கன, ஜீவன குரு சர மற்றும் ஜல ராசியான கடகத்தில் உச்சம் பெற்று மீனத்தில் சந்திரன் குரு,சந்திர பரிவர்தனை பெற்றிருந்தாலோ அல்லது சனி மகர வீட்டில் ஆட்சி பெற்று ,கடகத்திலா உள்ள குருவால் பார்க்கப்பட்டாலோ கடல் கடந்து செல்லும் யோகம்.

                                      

நன்றி.

(தங்களது சாதக பலன், திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

                    

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
(எம்.எஸ்.ஸி,எம்.ஏ,பி.எட்)
ஆசிரியர் & ஜோதிட ஆய்வாளர்
கறம்பக்குடி
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு.


               செல் : 97 151 89 647
               செல் : 740 257 08 99


         வாட்ஸ்அப் எண்
              97 151 89 647

Saturday, 22 August 2015

( 5 ) குழந்தைபாக்கியம் காலதாமதம் ஆவதற்கு சோதிட ரீதியான விரிவான விளக்கம்....

குழந்தை பாக்கியம் காலதாமதம் ஆவதற்கு சோதிட ரீதியான விளக்கம்,

                                                     

ஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

அனைவருக்கும் வணக்கம்,

                ஒரு தம்பதியர்களிடம் திருமணம் முடிந்தவுடன் உறவினர்களும்,நண்பர்களும் மற்றும் சமூகமும்  கேட்கும் அடுத்த கேள்வி வீட்டிலே ஏதாவது விசேஷமா? என சூசகமாக கேட்கும் கேள்வியிலே  அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியதுதான் .

இன்னும் ஒரு சில ஆண்டுகள் ஆனால் நேரடியாக கேட்டுவிடுவார்.என்னப்பா ஏதாவது டாக்டர்களிடம் காட்டினாயா இல்லை ஜாதகம் ஏதாவது பார்த்தீர்களா?என கேள்வி மேல் கேள்வி கேட்டு மனம் நோக செய்துவிடுவார்கள்.

குழந்தை பாக்கியம் சிலருக்கு மட்டும் தாமதமாவதற்கும்,ஒரு சிலருக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் காரணத்தையும்,அதற்குரிய பரிகார பலனையும் அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


                                                      




புத்திர ஸ்தானமும்,அதன் அதிபதியும்

              புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாமிடத்தில் பாவிகள் என்றழைக்கப்படும் ராகு,கேது,சனி போன்ற கிரகங்கள் இருந்து சுபர் பார்வையற்று இருப்பினும்,
புத்திர ஸ்தானாதிபதி எனப்படும் ஐந்தாமிட அதிபதி நீசம்,அஸ்தமனம்,பகை பெற்று இருந்தாலும்,அல்லது 6,8,12 போன்ற  மறைவிடங்களில் இருந்தாலும்
மேலும் புத்திர ஸ்தானாதிபதி பாவர் ந்ட்சத்திர சாரம் பெற்று பாவர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று 6,8,12 போன்ற மறைவிடங்களில் இருப்பின் இருப்பினும் புத்திர தோஷம் ஆகும்.

                                                          

 

புத்திரகாரகர் எனப்படும் ஸ்ரீகுரு பகவான்.

              ஸ்ரீ குரு பகவான் நீசம்,அஸ்தமனம்  மற்றும் பகை பெற்று  6,8,12 போன்ற மறைவிடங்களில் இருந்து பாவர் நட்சத்திர சாரமும்,சுபர் பார்வையற்று இருப்பினும் புத்திர தோஷமாகும்.


ஒன்பதாமிடம்

      புத்திரஸ்தானம் ஐந்திற்கு ஐந்தாமிடமாக ஒன்பதாம் இடம் திகழ்வதால் ஒன்பதாமிடத்தையும் நன்கு கவனிக்க வேண்டும்.


ஜோதிடர்களின் பங்கு

திருமண பொருத்தம் பார்க்கும் போது இருவருடைய ஜாதகப்படி பால் பொருத்தம் மற்றும் யோனி பொருத்தம் இருக்கிறதா? என பார்க்க வேண்டும

தம்பதியர் இருவருக்கும்  பால் உள்ள மரம் வந்து யோனி பொருத்தம் இருந்தாலும் ஜாதக கட்ட ரீதியாக இருவருக்கும் மேற்குறிப்பிட்டப்படி ஐந்தாமிடம் மற்றும் அதன் அதிபதி,புத்திரகாரகன் குரு ஆகியவர்களின் நிலையறிய வேண்டும்.

ஏனைய தோஷம் உள்ளவர்களுக்கு(செவ்வாய் தோஷம்,ராகு தோஷம்,சனி தோஷம்.....) தோஷம் உள்ளவர்களை இணைத்தாலும் ,
ஆனால் புத்திர தோஷம் உள்ள ஒரு ஆணின் ஜாதகத்திற்கு புத்திர தோஷம் இல்லாத பெண்ணின் ஜாதகப்படி குழந்தை இருக்க வாய்ப்பு உண்டு.

இருவருக்கும்  ஜாதக கட்ட ரீதியாக
புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களை இணைக்காமல் இருத்தலே நலம்.
இது ஜோதிடர்களின் தலையாய கடமையாகும்.இதுவரை புத்திர தோஷம் ஏற்பட அடிப்படையான காரணத்தை பகவானின் அருளாளும்,குருவருளாளும் எனக்கு தெரிந்த விஷயத்தின் அடிப்படையில் விளக்கினேன் .


                                                                               


இனி
புத்திர தோஷம் ஏற்பட

பல்வேறு ஜோதிட நூல்கள் கூறும் காரணங்கள்

மாந்தீரிக சக்கரவர்த்தி ஸ்ரீ குருவாயூரப்ப தாஸன் எழுதியது

                 1) சூரியன்,சுக்கிரன்,புதன் ஒன்று கூடி பெண்களுக்கு ஐந்தாம் இடத்தில் இருப்பின் கருச்சிதைவு.

                2 ) 7,8 க்கு உடையவர்கள் ஐந்தில் கூடினால் புத்திர சேதம் புத்திர தோஷம் ஏற்படுகிறது.இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

               3 ) லக்கினம் மீனமாகி 5-ம் இடமான கடகத்தில் செவ்வாய் நீசம் பெற்ற ஜாதகருக்கு முதல் தாரத்திற்கு குழந்தை இல்லை.ஆனால் இளைய தாரம் உண்டெண்றால் புத்திரபேறு ஏற்படலாம்.

           4) 1,5,9 -ல் சனி வலுத்து சுபர் பாராது இருப்பின் புத்திரதோஷம்.

            5) ஐந்தாம் அதிபன் பாவாதிபன் சனி உடன் கூடியிருப்பின் வீர்ய பலன் குறைந்து நீராகி புத்திரபேறு தடைபடும்.

          6) பெண் ஜாதகத்தில் ஜன்ம லக்கனத்திற்கு உரியவனும்,9-க்கு  உடையவனும் பரிவர்தனை பெற்றால் பிரசவத்தின்போது வயிற்றில் மகவுடனேயே தாயும் மரிக்கும் வாய்ப்பு ஏற்படலாம்.

          7)  பெண்ணுக்கு கடகம் லக்கினமாகி விருட்சகத்தில் சந்திரன் நீசனாகி இருந்தால் ஆண்குழந்தை சொற்பம்(அரிது).

         8) 5-ம் அதிபதியுடன் 6-ம் அதிபதி கூடியிருக்க இதில் ஆறாம் அதிபதி மட்டும் வலுத்திருந்தால்(சூரியர்,சந்திரர்களுக்கு மட்டும்தான் பொருந்துவார்) .இந்த மாதிரியாக கூடிய 5,6 அதிபதிகளை சுபர் யாரும் பார்க்காமல் இருந்தால் அவன் பகைவன் இட்ட சாபத்தால் மகப்பேறின்றி துன்புறுவான்.

          9) 4-ம் இடத்திலும்,12-ம் இடத்திலும் பாவிகள் இருக்க 5-ம் அதிபதியுடன் பாவிகள் கூட அல்லது சனி கூட பெற்ற தாய் இட்ட சாபத்தால் மகப்பெறு அற்று போகும்.

          10) ஒன்பதிலே பாவி இருக்க ஐந்தாம் இட அதிபதியுடன் சனி கூட திரிகோன ஸ்தானங்களில் ஒன்றில் குளிகன்(மாந்தி) இருக்க தந்தை செய்த பாவத்தால் மகவுகள் பிறக்காது.பிறநதாலும் அழிந்துவிடும்.

           11 ) தனுசு அல்லது மீன வீட்டில் சந்திரன் இருக்க ஐந்தாம் இடத்தில்  பாவிகள் இருக்க ,சந்திரனையும் அந்த பாவர்களையும் சுபர்கள் பாராது விட்டால் அவனுக்கு ஓளரஸ் மகவு இல்லை. ஓளரஸ் என்றால் தன் இந்திரியத்திற்கு பிறக்கும் குழந்தை என்பது பொருள்.

        மனைவி வழி தவறிச்சோரம் போய் பிறர் இந்திரியத்திற்கு குழந்தை பிறந்து அதை தகப்பன் தனது என்றே எண்ணி உண்மையை அறியாமல் தன் மகவாக எண்ணி உண்மையை அறியாமல் வளர்ப்பான்.அல்லது
இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்றார்போல் மாற்றான் இந்திரியத்தை ஊசி மூலம் செலுத்தி அதன்மூலம் பெற்ற குழந்தையாக இருக்கும்.


         12) லக்கனத்திற்கு ஐந்தாம் வீட்டை சனி,ராகு,கேது இவைகளில் ஒருவர் சந்திரனுக்கு கேந்திரங்களில் நின்று பார்ப்பாராகில் குழந்தை பிறந்து  இறந்து போகும்.

                                                         




கேரள ஜோதிடத்தில் உள்ளபடி புத்திரபாக்கியம்

            1)  ஐந்துக்குடையவர் புதன் வீட்டில் ஏகனாய்(தனித்து) நின்றால் குழந்தை பாக்கியம் இல்லை.கூட்டுகிரகம் இருந்தால் அல்லது பாரத்தால் மறுதாரம் செய்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்கும்.

             2)  குருவோடு சூரியன்  அவருக்கு ஏழில் குஸனும் ,சனியும் சேர அவனுக்கு புத்திரவம்சம் நிற்க வாய்ப்பு குறைவு.சந்திரனும் கூடியிருந்தால் தாய்க்கு தோஷம் ஆகும்.

          3 )  திருவாதிரை அல்லது அஸ்த நட்சத்திரலாவது புத்திரஸ்தானாதிபதி புத்திரர் இருக்க வாய்ப்பு குறைவு.

             4 ) மிருகசீரிடம்,புனர்பூச நட்சத்திரத்தில்5-ம் அதிபதி இருப்பின் வெகுகாலம் கழித்து புத்திரபாக்கியம் ஏற்படும்.

              5 ) புத்திஸ்தானாதிபதி புதனாக இருந்து சனி வீடு ஏறினாலும்,சனியாக இருந்து புதன் வீடு ஏறினாலும் புத்திரபாக்கியம் ஏற்பட வாய்ப்பில்லை.

                                                           




சில்லறைக்கோவை -298 -ம் பக்கம்

*************************************
             லக்கனம்,பஞ்சமஸ்தானம்,ஒன்பதிலும் சனி,ராகு,கேது,மாந்தி இருந்தால் முன் ஜன்மத்தில் செய்த பழிபாவத்தினாலும்,கருவழித்தனத்தாலும்,சர்ப்பத்தை கொன்ற பாவத்தினாலும் சந்தநி இல்லாமல் கலங்குவார்கள்.ஆனால் அதற்குரிய கர்ம சாந்தி செய்ய கீர்த்தி பிரகாசம் பொருந்திய பிள்ளை பிறக்க வாய்ப்பு ஏற்படும்.



மேலும் பல அனுபவகருத்துக்கள்

                  1) புத்திஸ்தானாதிபதி சூரியனுடன் இணைவு பெற்று அஸ்தங்கம் ஆனாலும் புத்திரதோஷம் ஏற்படும்.

                 2) 5-ல் ராகு,கேது,செவ்வாய்,சூரியன் மற்றும் சனி யாராவது ஒருவர் இருந்தாலும்,ஐந்தாம் வீடு சனி அல்லது புதன் வீடாகி அவ்வீட்டாதிபதி சனியுடன் இணைந்தாலும் புத்திரயோகம் இல்லை.

                  மேற்கண்ட காரணங்களால் புத்திரதோஷம் ஏற்படுகிறது..புத்திரதோஷங்களை பரிகாரங்களால் எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
                                                         
(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன ஜாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறையை பெறலாம்.)

     அன்புடன்
சோதிடர் சோ.ப.ரவிச்சந்திரன்
           M.Sc,M.A,BEd

                    சோதிட ஆராய்சியாளர்,
          முதுநிலை வேதியியல் ஆசிரியர்,
         வாழ்வியல் ஆலோசகர்
      ஓம் சக்தி அஸ்ட்ரோ ஆன்லைன் சென்டர்,
       கறம்பக்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.தமிழ்நாடு.



                   அலைபேசி :9715189647

                   அலைபேசி : 
  740 257 08 99



                   எனது வாட்ஸ்அப் எண்

                               97 151 89 64

Email ; masterastroravi@gmail.com
....